/* */

நாமக்கல் மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.53 கோடி ரொக்கம் வழங்கல்

நாமக்கல் மாவட்டத்தில் 5,30,606 குடும்பங்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ. 53 கோடி ரொக்கம் வழங்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.53 கோடி ரொக்கம் வழங்கல்
X

நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங்.

நாமக்கல் மாவட்டத்தில், 5,30,606 குடும்பங்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ. 53 கோடி ரொக்கம் வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து, மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் உள்ள பொதுமக்கள், தைப்பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில், தமிழக முதல்வர் ஸ்டாலின், அனைத்து அரிசி பெறும் ரேசன் கார்டுதாரர்களுக்கும், மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும், பொங்கல் பரிசாக 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 1 முழு நீளக் கரும்பு மற்றும் ரூ.1000/- ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கிட உத்தரவிட்டார். மேலும், சென்னையில் நடைபெற்ற விழாவில் அவர் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்வினை தொடங்கி வைத்தார்.

அதனைத்தொடர்ந்து, நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல் நகராட்சி, முல்லை நகர் ரேசன் கடையில், கடந்த 9ம் தேதி நடைபெற்ற பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கும் நிகழ்ச்சியில், கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமையில், ராஜ்யசபா எம்.பி ராஜேஷ்குமார் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்வைத் தொடங்கி வைத்தார். நாமக்கல் மாவட்டத்தில் 8 தாலுக்கா பகுதியில் உள்ள, 914 ரேசன் கடைகளில், 5,42,083 ரேசன் கார்டுதாரர்களுக்கும், பரமத்தி வேலூர், சேந்தமங்கலம் மற்றும் மோகனூர் ஆகிய இடங்களில் உள்ள 3 இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் வசிக்கும், 673 ரேசன் கார்டுதாரர்களுக்கும் என மொத்தம் 5,42,756 குடும்ப ரேசன் கார்டுதாரர்களுக்கு, பொங்கல் பரிசாக, பச்சரிசி ஒரு கிலோ, சர்க்கரை ஒரு கிலோ, ஒரு முழுக் கரும்பு மற்றும் ரூ.1,000/- ரொக்கம் அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்புகள் வழங்கும் பணி நடைபெற்று வந்தது.

இதுவரை, மாவட்டத்தில் 8 தாலுக்கா பகுதியில் உள்ள, 914 ரேசன் கடைகளில், 5,30,606 ரேசன் கார்டுதாரர்களுக்கு, பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் தலா ரூ.1,000/- வீதம் ரூ. 53 கோடியே 6 லட்சத்து 6 ஆயிரம் ரொக்கப்பணம் வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 26 Jan 2023 1:00 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்