/* */

நாகை - சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

நாகை - சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
X

நாகப்பட்டினத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வார விழாவையொட்டி ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த இரு சக்கர வாகன பேரணியை மாவட்ட எஸ்பி., ஓம் பிரகாஷ் மீனா தொடங்கி வைத்தார்.

நாகப்பட்டினத்தில் வட்டார போக்குவரத்து துறை சார்பில் 32-வது தேசிய சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 18ம் தேதி முதல் இந்த மாதம் 17ம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு மற்றும் ஹெல்மெட் அணிவதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. பேரணியை நாகப்பட்டினம் மாவட்ட எஸ்.பி., ஓம்பிரகாஷ் மீனா தொடங்கி வைத்தார்.

பேரணியில் காவலர்கள், மகளிர் காவலர்கள், பொதுமக்கள் ஹெல்மெட் அணிந்து பங்கேற்றனர். நாகப்பட்டினம் அவுரி திடலில் தொடங்கிய பேரணி சுமார் 3 கிலோமீட்டர் தொலைவிற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது. சாலைகளில் செல்லும் போது இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் ,வாகன ஓட்டிகள் தங்களிடம் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும் போன்றவற்றை வலியுறுத்தி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Updated On: 4 Feb 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    முகூர்த்தம், வார இறுதி நாளையொட்டி ஈரோட்டில் இருந்து சிறப்பு...
  2. குமாரபாளையம்
    குமாரபாளையம் அருகே மின்சாரம் தாக்கி கணவன்- மனைவி உயிரிழப்பு
  3. சோழவந்தான்
    பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள தடுப்புகளை அப்புறப்படுத்த கோரிக்கை..!
  4. நாமக்கல்
    திருச்செங்கோடு பிரபல தனியார் கல்வி நிறுவனத்தில் வருமான வரித்துறை...
  5. மதுரை
    சந்தானம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு: புதிய நாயகி அறிமுகம்..!
  6. திருமங்கலம்
    கீழே கிடந்த தங்க நகைகளை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த முன்னாள்...
  7. நாமக்கல்
    தெலுங்கானா போல் தமிழகத்திலும் காங்கிரஸ் ஆட்சி: செல்வ பெருந்தகை பேச்சு
  8. தேனி
    தேனியில் கொந்தளித்த டெல்லி அதிகாரி..!
  9. தொழில்நுட்பம்
    மோட்டோரோலா எட்ஜ் 50 பியூஷன் அறிமுகம்: விலை, சலுகைகள், அம்சங்கள்!
  10. திருவள்ளூர்
    மாற்றம் தொண்டு நிறுவனம் சார்பில் பழங்குடியின குழந்தைகளுக்கு