திமுக முப்பெரும் விழா: திமுக மூத்த முன்னோடிகள் கௌரவிப்பு
திமுக முப்பெரும் விழாவில் 250 மூத்த முன்னோடிகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் பொற்கிழி வழங்கப்பட உள்ளது
HIGHLIGHTS
திமுக முப்பெரும் விழா செப் 15 சென்னை அறிவாலயத்தில் நடைபெறுவதையொட்டி கரூரிலும் காணொளி. காட்சி வாயிலாக முப்பெரும் விழா நடைபெறுகிறது. இதில் 250 திமுக மூத்த முன்னோடிகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் பொற்கிழி வழங்கப்படுகிறது என்றார் மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி.
கரூரில் திமுக முப்பெரும் விழா நடைபெறுவது தொடர்பான திமுக மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சென்னையில் செப்டம்பர் 15 -ஆம் தேதி திமுக முப்பெரும் விழா காணொளி காட்சியாக நடைபெறுகிறது. இதையொட்டி கரூரில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் திமுக மூத்த முன்னோடிகள் 250 பேருக்கு தலா 10 ஆயிரம் பொற்கிழி வழங்கப்பட உள்ளது.
மின் நுகர்வோர் குறைதீர்க்கும் மையத்துக்கு 3 லட்சத்துக்கும் மேற்பட்ட புகார்கள் வரப்பெற்றுள்ளன அதில் 97 விழுக்காடு தீர்வு காணப்பட்டுள்ளது. மின்வாரிய புகார்களுக்கு 107 தொலைபேசி எண்கள் இருந்தன. இப்போது ஒரே எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் எளிதாக மின் தொடர்பான புகார்களை எளிதில் பதிவு செய்து தீர்வு காணப்படுகிறது.
நிகழாண்டில், இலவசம், தட்கல், சுயநிதி என ஒரு லட்சம் மின் இணைப்புகள் விவசாயிகளுக்கு வழங்க மாவட்ட வாரியாக கணக்கெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் விவசாயிகளிடம் வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த காலங்களில் விவசாயிகளுக்கு வஞ்சிக்கப்பட்ட மின் இணைப்புகள் திமுக அரசு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.