பிறந்தநாள் கொண்டாட்டத்தில் குற்றவாளிகள். கைது செய்து சிறையிலடைப்பு
பிறந்தநாள் கொண்டாட்டத்தில் குற்றவாளிகள் இருந்ததை கண்ட காவல்துறையினர், அவர்களை பிடித்து சிறையில் அடைத்தனர்.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் அம்மங்கார தெருவை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் காஞ்சிபுரம் பகுதிகளில் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவரது தனது பிறந்த நாளை காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையம் அருகிலுள்ள தமிழ்நாடு ஹோட்டல் மதுபான கூடத்தில் தனது நண்பர்களுடன் கொண்டாடியுள்ளார். மேலும் விடுதி அறையில் எடுத்து மது, பிரியாணி விருந்துகொடுத்துள்ளார்.
இந்நிலையில் மது விருந்தில் நண்பர்களிடையே சிறிய சலசலப்பு ஏற்பட்டு கூச்சல் அதிகமானதைத் தொடர்ந்து சிவகாஞ்சி காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் காவல்துறையினர் அங்கு சோதனையிட்டதில் அந்த மது விருந்தில் பல பழைய குற்றவாளிகள், வழக்கறிஞர்கள் என பலர் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து அவர்களை பிடிக்க முற்பட்டபோது பலர் தப்பி ஓடியுள்ளனர்.
மேலும் அங்கிருந்த சுபாஷ் சந்திரபோஸ், காமேஷ் , கொலை வழக்கு குற்றவாளிகளான ஏனாத்தூர் கமல் , கோனேரிக்குப்பம் நிர்மல் ராஜ் , ராஜேஷ் நபர்களை பிடித்த போது, அவர்கள் தேடப்பட்டு வந்த பழைய குற்றவாளிகள் என்பது தெரிய வந்தது. காவல்துறை அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 6 பேரை சிறையில் அடைத்தனர்.
மேலும் தப்பி ஓடிய நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சமீப காலமாகவே காஞ்சிபுரம் மாவட்டம் சுற்றுப்பகுதிகளில் பிரபல தொழிலதிபர்கள் தங்களது பிறந்தநாளை குற்றவாளிகளுடன் கொண்டாடி, அவர்களுக்காக மற்றும் பிரியாணி விருந்து நடத்துவது வாடிக்கையாகி வருகிறது.