/* */

கர்ப்பிணிப் பெண்ணை பார்க்க சென்ற தாயிடம் 8 பவுனை அபேஸ் செய்த மர்ம நபர்கள்

ஒரிக்கையில் கர்ப்பிணிப் பெண்ணை பார்க்க சென்ற தாயிடம் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 8 சவரன் செயினை பறித்து சென்றனர்.

HIGHLIGHTS

கர்ப்பிணிப் பெண்ணை பார்க்க சென்ற தாயிடம்  8 பவுனை அபேஸ் செய்த மர்ம நபர்கள்
X

பைல் படம்

காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியில் வசிப்பவர் சுமதி அவருடைய மகன் குமரேசன் ஆகிய இருவரும் வசித்து வருகின்றனர்.

இவர்களது மகளான பவித்ராவை அண்ணா குடியிருப்பில் வசித்து வரும் லட்சுமணன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.

தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ள பவித்ராவை பார்ப்பதற்காக தாயார் சுமதி மகனுடன் இருசக்கர வாகனத்தில் அண்ணா குடியிருப்பில் பகுதிக்கு இரவு 9 மணியளவில் சென்றுள்ளனர்.

அப்போது பின் தொடர்ந்து பைக்கில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் இவர்கள் மீது மோதுவது போல் வந்து கழுத்திலிருந்த தாலி சரடு 5 சவரன் , மூப்பு வைத்த செயின் 3 சவரன் மொத்தம் 8 சவரன் நகையை அறுத்துக்கொண்டு மின்னல் வேகத்தில் சென்று விட்டனர்.

இருவரும் கூச்சலிட்டது அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டனர். இதில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. சம்பவம் குறித்து காஞ்சி தாலுகா காவல் துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் செயின் பறிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 15 Aug 2021 6:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது