மணியான, மனித நேயரின், மணிப்பூர் ஆளுநர் பணி சிறக்க வாழ்த்திய விஜயேந்திரர் சுவாமிகள்
காஞ்சி ஸ்ரீ விஜயேந்திரர் சுவாமிகளிடம் ஆசி பெற வந்த இல. கணேசனை, சுவாமிகள் மணியான, மனித நேயரின் மணிப்பூர் ஆளுநர் பணி சிறக்க வாழ்த்துவதாக தெரிவித்தார்.
HIGHLIGHTS
பாஜக மூத்த நிர்வாகியாக பணி புரிந்து வந்த இல கணேசன் கடந்த சில நாட்களுக்கு முன் மணிப்பூர் மாநில ஆளுநராக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தால் நியமிக்கப்பட்டார்.
விரைவில் மணிப்பூர் சென்று பதவியேற்கவுள்ள நிலையில் இன்று காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சந்திரசேகர சுவாமிகள் மணி மண்டபத்தில் சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொண்டு வரும் ஸ்ரீ காஞ்சி விஜியேந்திரரை சந்தித்து அருள் ஆசி பெற்றார்.
அவருக்கு சங்கர மடம் சார்பில் பொன்னாடை போர்த்தப்பட்டு, மாலை மரியாதைகள் செய்யப்பட்டது. தமிழகத்திலிருந்து மணியான மனித நேயர் மணிப்பூர் செல்லும் இல கனேசன் சிறப்பாக பணியாற்ற வாழ்த்துவதாக விஜயேந்திரர் ஸ்வாமிகள் தெரிவித்தார்
இந்நிகழ்வின் போது மாநில பாஜக அமைப்புசாரா தொழிலாளர்கள் அணி மாநில துணைத்தலைவர் கணேஷ் , பூங்காவனம், ஓம்சக்தி பெருமாள், ஜீவா, உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் உடனிருந்தனர்