/* */

ஒலி,ஒளி அமைப்பினர் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகேட்டு மனு

ஒலி,ஒளி அமைப்பாளர்கள் கொரோனா கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு கேட்டு கலெக்டரிடம் மனு அளித்தனர்.

HIGHLIGHTS

ஒலி,ஒளி அமைப்பினர்  கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகேட்டு மனு
X

திருவண்ணாமலையில் கொரோனா கட்டுப்பாடுகளில் விலக்கு கேட்டு ஒலி.ஒளி அமைப்பாளர்கள் கலெக்டரிடம் மனு அளிக்க வந்திருந்தனர்.

ஒலி ஒளி அமைப்பாளர்கள், சமையல் கலைஞர்கள், பந்தல் மேடை அமைப்பாளர்கள் வாடகை பாத்திர பொருட்கள் உரிமையாளர்கள் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் என இவர்களை சார்ந்துள்ள சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களை கொரோனா இரண்டாவது அலையில் இருந்து பாதுகாத்துக்கொள்ள தமிழக அரசின் கட்டுப்பாடுகளில் இருந்து தளர்வுகளை அளிக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

2020-ம் ஆண்டு கொரோனா நோய்த்தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் கொண்டு வந்த ஊரடங்கு உத்தரவினால் மேடை ஒலி ஒளி அமைப்பாளர்கள் சமையல் கலைஞர்கள் வாடகை பாத்திரம் பொருட்கள் உரிமையாளர்கள் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் என அனைவரும் வாழ்வாதாரம் இழந்து இருந்த சூழ்நிலையில் தற்போது தான் அதிலிருந்து மீண்டு வர தொடங்கியதாகவும்.

இந்த நிலையில் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு இரண்டாவது அலை தொடங்கியுள்ள நிலையில் தமிழக அரசு மீண்டும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒலி ஒளி அமைப்பாளர்கள், சமையல் கலைஞர்கள், வாடகை பாத்திரம் பொருட்கள் உரிமையாளர்கள் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் என 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இருப்பதாகவும் இவர்களை சார்ந்து தொழில் செய்பவர்கள் 5 லட்சத்திற்கும் மேல் உள்ளதாகவும், மீண்டும் இவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளதாக தெரிவித்தனர்.

தற்போது விழாக் காலம் என்பதால் இந்த சூழ்நிலையில் திருவிழா நிகழ்வுகளை தடை செய்தும் திருமண விழாக்களில் 100 நபர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு மீண்டும் தங்களை பாதாளத்துக்கு தள்ளும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. தமிழக அரசு இதை கவனத்தில் கொண்டு கட்டுப்பாடுகளுடன் திருவிழாக்களை நடத்திக் கொள்ளவும், அரங்குகள் மற்றும் மண்டபங்களில் அனுமதிக்கப்பட்ட அளவில் 50% நபர்கள் கலந்து கொள்ளவும் அனுமதிக்குமாறு கேட்டு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தனர்.

Updated On: 19 April 2021 4:45 PM GMT

Related News

Latest News

  1. மயிலாடுதுறை
    மயிலாடுதுறையில் பள்ளி வாகனங்கள் ஆய்வு..!
  2. வானிலை
    தமிழகத்தில் 6 நாட்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம்
  3. திருவள்ளூர்
    மின்சாரம்,குடிநீர் தட்டுப்பாடு : பொதுமக்கள் சாலை மறியல்..!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் தரும் முருங்கைக் கீரை சூப் செய்வது எப்படி?
  5. உலகம்
    இன்னலுறும் நோயாளிகளுக்கு உதவும் செவிலியரை போற்றுவோம்..! நாளை செவிலியர்...
  6. வீடியோ
    சபையில் வைத்து கிழிக்கப்பட்ட ஐ.நா தீர்மானம் | இது தான் காரணமா ?...
  7. ஈரோடு
    கோபியில் கல்லூரிக் கனவு வழிகாட்டல் நிகழ்ச்சி: மாவட்ட ஆட்சியர்...
  8. வீடியோ
    🔴LIVE : பள்ளிக்கரணை ஆணவக்கொலை வழக்கு பற்றி மூத்த வழக்குரைஞர்...
  9. ஈரோடு
    ஈரோட்டில் பள்ளி வாகனங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
  10. நாமக்கல்
    நாமக்கல் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் 100...