/* */

திருவண்ணாமலையில் 105 டிகிரி வெயில் கொளுத்தியது

திருவண்ணாமலையில் நேற்று 105 டிகிரி வெயில் கொளுத்தியது. சாலைகளில் அனல்காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர்.

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் 105 டிகிரி வெயில் கொளுத்தியது
X

திருவண்ணாமலையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. 98, 99, 100 டிகிரி என பதிவாகி வந்த வெயிலின் அளவு நேற்று இந்த ஆண்டின் அதிகபட்சமாக 105 டிகிரி பதிவானது. நேற்று வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் சாலைகளில் அனல்காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர்.

வெயிலின் தாக்கத்தால் பெண்கள் கைக்குட்டை, துப்பட்டாவால் முகத்தை மூடியபடியும், பொதுமக்கள் சாலைகளில் குடை பிடித்தபடியும் நடந்து சென்றதை காணமுடிந்தது. வெயிலின் தாக்கத்தால் சாலைகளில் கானல் நீர் தோன்றியது. வெப்பத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாமல் வாகன ஓட்டிகள் வியா்வையில் நனைந்தவாறு சாலையோரம் உள்ள மரத்தின் நிழலில் தஞ்சம் அடைந்தனர்.

ஆங்காங்கே இருக்கும் தர்பூசணி, கிர்ணிபழம், இளநீர் கடைகளிலும், பழரச கடைகளிலும், மோர், கரும்புச்சாறு உள்ளிட்ட குளிர்பான கடைகளிலும் வியாபாரம் களைக்கட்டியது. 4-ந்தேதி அக்னி நட்சத்திரம் தொடங்க உள்ளது. அதற்கு முன்பே 105 டிகிரி வெயில் அளவு பதிவாகி உள்ளது. இதனால் வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் எப்படி இருக்குமோ என்று மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.

Updated On: 1 May 2022 2:49 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்