/* */

சிறப்பாக புலனாய்வு செய்த காவல் துறையினருக்கு டிஜிபி பாராட்டு

திருவண்ணாமலை மாவட்டத்தில் மெச்சத்தக்க வகையில் சிறப்பாக புலனாய்வு செய்த காவல்துறையினரை டிஜிபி பாராட்டினார்

HIGHLIGHTS

சிறப்பாக புலனாய்வு செய்த காவல் துறையினருக்கு டிஜிபி பாராட்டு
X

 திருவண்ணாமலை மாவட்டத்தில் மெச்சத்தக்க வகையில் சிறப்பாக புலனாய்வு செய்த காவல்துறையினரை டிஜிபி பாராட்டினார்

செங்கம் அரசு மருத்துவமனைக்கு எதிரில் ஓய்வு பெற்ற அரசு ஊழியரிடம் 3 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் அப்போதைய கண்ணமங்கலம் காவல் ஆய்வாளர் தற்போது ராணிப்பேட்டை மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் சசிகுமார் தலைமையிலான காவல்துறையினர் சிறப்பாக புலன் விசாரணை செய்து இதில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து மூன்று லட்ச ரூபாய் பறிமுதல் செய்தனர்.

ஜமுனாமரத்தூர், வீரப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த திருப்பதி, வயது 40 என்பவர் கடந்த 12.07.2018 ஆம் தேதி காணாமல் போனதாக ஜமுனாமரத்தூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருந்த நிலையில் ஜமுனாமரத்தூர் உதவி ஆய்வாளர் முருகன் தலைமையிலான காவல்துறையினர் சிறப்பாக புலன் விசாரணை செய்து காணாமல் போன திருப்பதியை கொலை செய்த பலாக்கானூர் கிராமம் மணி @ ராமசாமி, என்பவரை கைது செய்தனர்.

கடலாடி காஞ்சி காமராஜ் நகர் டாஸ்மாக்கில் வழிப்பறி செய்த வழக்கில் மங்கலம் காவல் உதவி ஆய்வாளர் சத்யாநந்தன் தலைமையிலான காவல்துறையினர் சிறப்பாக புலன் விசாரணை செய்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்தனர்.

திருவண்ணாமலை தென்றல் நகரில் கடந்த 20.10.2021 ஆம் தேதி வீட்டை உடைத்து திருடிய வழக்கில் அப்போதைய கீழ்பெண்ணாத்தூர் காவல் ஆய்வாளர் தற்போது கடலாடி காவல் ஆய்வாளர் R.லட்சுமிபதி தலைமையிலான காவல்துறையினர் சிறப்பாக புலன் விசாரணை செய்து வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து திருடுபோன 25 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.

மேற்கண்ட வழக்குகளில் காவலர்களின் மெச்சத் தகுந்த பணியை பாராட்டி வேலூர் சரக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் தமிழக தலைமை காவல் துறை இயக்குனர் சைலேந்திரபாபு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கி பாராட்டினார் இந்நிகழ்வில் வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் டாக்டர்..ஆனி விஜயா,திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

Updated On: 19 March 2022 1:27 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!
  2. லைஃப்ஸ்டைல்
    ‘குடும்பத்தில் சுயநலம் பெருகினால், உறவுகள் விலகிப் போகும்’
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்
  4. கல்வி
    பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மாவட்டவாரியாக தேர்ச்சி விகிதம்
  5. லைஃப்ஸ்டைல்
    ‘தூக்கத்தில் வருவதல்ல கனவு; உன்னை தூங்க விடாமல் செய்வதே கனவு’ - கலாம்...
  6. பூந்தமல்லி
    தண்ணீர் தொட்டில் விழுந்து 3 வயது சிறுமி உயிர்ழப்பு
  7. கல்வி
    பரீட்சையில் Fail ஆகிட்டா, தோத்துட்டோம்ன்னு அர்த்தமா...?
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. ஆன்மீகம்
    காக்கும் கடவுள் கணேசனை நினை... கவலைகள் அகல அவன் அருள் துணை!
  10. கோவை மாநகர்
    கோவையில் பத்தாம் வகுப்பில் 94.01 சதவீதம் பேர் தேர்ச்சி