/* */

பள்ளி ஆசிரியர்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை கொரோனா பரிசோதனை

பள்ளி ஆசிரியர்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை கொரோனா பரிசோதனை. திருவண்ணாமலை ஆட்சியர் உத்தரவு

HIGHLIGHTS

பள்ளி ஆசிரியர்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை கொரோனா பரிசோதனை
X

திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ்

திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை கொரோனா பரிசோதனை செய்ய ஆட்சியர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்

தமிழகத்தில் கொரோனா தொற்று வழிகாட்டு நெற்முறைகளை பின்பற்றி கடந்த 1-ந் தேதி முதல் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றது. அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்திலும் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை நடைபெற்று வருகிறது..

இந்த நிலையில் கடலாடியில் உள்ள அரசு பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர் ஒருவருக்கு கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அவரது வீட்டில் உள்ள 5 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும் ஆசிரியர் பாடம் நடத்திய மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் மாணவர்கள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்பட வில்லை.

இந்த நிலையில் 15 நாட்களுக்கு ஒரு முறை ஆசிரியர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

மாணவர்களும், ஆசிரியர்களுக்கும் கொரோனா தொற்றால் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வண்ணம் மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக மாவட்டத்தில் உள்ள அனைத்துப்பள்ளி தலைமை ஆசிரியர்களும் கண்டிப்பாக தங்கள் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் 15 நாட்களுக்கு ஒரு முறை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை செய்வதை முதன்மைக்கல்வி அலுவலருக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

பள்ளிக்கு வரும் அனைத்து மாணவர்களுக்கும் சுழற்சி முறையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த பணியினை அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்களும் தவறாமல் கண்காணித்து ஒவ்வொரு 15 நாட்களுக்கும் தவறாமல் முதன்மை கல்வி அலுவலர் மூலம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இந்த பணிக்கு ஏற்கனவே நியமனம் செய்யப்பட்டு உள்ள பொறுப்பு அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ள பள்ளிகளை கண்காணித்து இது குறித்து அறிக்கையினையும் அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்

Updated On: 7 Sep 2021 7:22 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதலில் சந்தேகம்!? எப்பேர்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்...!
  2. லைஃப்ஸ்டைல்
    வெறுப்பு: ஒரு தவிர்க்க இயலாத உணர்வு தான்! அதை எப்படி எதிர்கொள்வது?
  3. காஞ்சிபுரம்
    ஸ்ரீபெரும்புதூர் அருகே மர்மமான முறையில் எரிந்த இரண்டு ஜேசிபி...
  4. மேட்டுப்பாளையம்
    குளம் போல் காட்சியளிக்கும் பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலம்: வாகன...
  5. மதுரை மாநகர்
    மதுரை மாட்டுத்தாவணி காய் கனி வியாபாரிகள் பொதுக் குழுக் கூட்டம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    நிம்மதி நிம்மதி உங்கள் சாய்ஸ்!
  7. கோவை மாநகர்
    கோவை அரசு மருத்துவமனையில் சவுக்கு சங்கருக்கு மருத்துவ பரிசோதனை
  8. காஞ்சிபுரம்
    உத்திரமேரூர் பகுதி அரசு திட்டங்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு.
  9. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே பூட்டிக் கிடந்த மரக் கடையில் தீ விபத்து
  10. சோழவந்தான்
    வாடிப்பட்டி அருகே வைகாசி விசாக திருவிழா..!