குளம் போல் காட்சியளிக்கும் பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலம்: வாகன ஓட்டிகள் அவதி

குளம் போல் காட்சியளிக்கும் பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலம்:  வாகன ஓட்டிகள் அவதி
X

மேம்பாலத்தில் தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் அவதி

பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலத்தில் தண்ணீர் குளம் போல தேங்கி நிற்பதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

கோடை காலம் நிலவி வரும் நிலையில், தமிழ்நாடு முழுவதும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இதனிடையே கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் கோடை மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் கோவை மாவட்டம் பெரியநாய்க்கன்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றிரவு மிதமான மழை பெய்தது. இதன் காரணமாக பெரியநாய்க்கன்பாளையம் மேம்பாலத்தில் குளம் போல தண்ணீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் மற்றும் நீலகிரி மாவட்டம் செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளதால், கவுண்டம்பாளையம், துடியலூர் மற்றும் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கடந்த அதிமுக ஆட்சியில் உயர் மட்ட பாலங்கள் கட்டப்பட்டது. இந்த பாலங்கள் அனைத்தும் தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

இதில் பெரியநாயக்கன்பாளையத்தில் 115 கோடி ரூபாய் மதிப்பில் எல்.எம்.டபிள்யூ பிரிவு முதல் வீரபாண்டி பிரிவு வரை சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசலை தவிர்க்க உயர் மட்ட பாலம் கட்டப்பட்டது. அதில் பாலத்தின் முடிவில் உள்ள குடியிருப்புகள் அகற்றப்படாமல் உள்ளதால் அங்கு சாலை குறுகி அடிக்கடி விபத்துகள் நடைபெற்று வருகிறது. மேலும் முறையான திட்டமிடல் இல்லாமல் உயர் மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளதாகவும், வடிகால் வசதிகள் செய்யப்படாமல் கட்டப்பட்டதால் வாகன ஓட்டிகள் சிரமம்பட்டு வருவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் கோடை மழை காரணமாக பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள பாலத்தின் மீது மழை நீர் குளம் போல தேங்கி இருக்கிறது. மழை நீர் வெளியேற முறையான வசதி செய்யவில்லை என வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்தனர்.

மேம்பாலத்தில் குளம் போல காட்சி அளிக்கும் மழை நீர் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Tags

Next Story
Similar Posts
கோவை மாவட்டம் அன்னூரில் இளைஞரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கைது
பொள்ளாச்சி அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த 3 வயது குழந்தை
சூப்பர் பவர் உள்ளதாக கூறி விடுதி மாடியில் இருந்து குதித்த கல்லூரி மாணவர்
கோவை மாவட்ட பலகார கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை
கோவையில் நடைபெற்ற ரோஸ்கர் மேளா நிகழ்ச்சியில் 191 பேருக்கு பணி நியமன ஆணை
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
வீரகேரளம் பகுதியில் இலவச கண் பரிசோதனை முகாம்!
21999க்கே இவ்ளோ அம்சங்களா? 3D டிஸ்பிளே.. OIS கேமரா.. SONY சென்சார்.. 5500mAh பேட்டரி! எப்படி சாத்தியம்?
கோவை பொறியியல் கல்லூரி விடுதியில் மாணவர் தூக்கு போட்டு தற்கொலை
அருந்ததியர் உள் ஒதுக்கீடு விவகாரம்: திருமாவளவனுக்கு அதியமான் கேள்வி
சூலூரில் சாக்கடைநீருடன் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார் பொக்லைன் இயந்திரத்தின் மூலம் மீட்பு!
5 ஆயிரம் ரூபாய்க்கு 5G ஃபோன் தரும் BSNL! 7000mAh பேட்டரி, 120MP கேமராவுடன்! உண்மையா?
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி