/* */

திருவண்ணாமலையில் சமரச மையம் குறித்த விழிப்புணர்வு பேரணி

திருவண்ணாமலையில் நீதிமன்ற சமரச மையம் மூலம் வழக்குகளில் தீர்வு முறை குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் சமரச மையம் குறித்த விழிப்புணர்வு பேரணி
X

இலவச சமரச மையத்தின் செயல்பாடுகள் அடங்கிய விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கிய மாவட்ட நீதிபதி மதுசூதனன்

திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், சமரச தின விழிப்புணா்வு முகாம், புத்தகக் கண்காட்சி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்ற சமரச தின விழிப்புணா்வுப் பேரணி ஆகியவை நடைபெற்றன.

இந்தியா முழுவதும் உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதல் படி தேங்கி உள்ள சிறு வழக்குகளை முடித்து வைப்பதற்காக உயர்நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் சமரச மையங்கள் செயல்பட்டு வருகிறது. நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகளை சமரசம் மையத்திற்கு அனுப்பி இரு தரப்பினருக்கும் எந்தவித இழப்பும் இல்லாமல் சமரசத்தின் மூலம் தீர்வு காணப்பட்டு வருகிறது. இதனால் வழக்காடிகளுக்கான இரு தரப்பு உறவுகளும் மேம்பட வழி செய்கிறது.

மேலும் இந்த சமரசம் மையத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் நிகழ்வுகளுக்கு பிறகு மேல்முறையீடு இல்லை எனவும் இதற்காக செலுத்தப்பட்ட நீதிமன்ற கட்டணங்கள் திருப்பி அளிக்கப்படுகிறது . இந்த வழிகாட்டுதல் நெறிமுறகைளை பின்பற்றி அனைத்து மாவட்டங்களிலும் சமரச மையங்கள் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் பொது மக்களுக்கு இது குறித்த விழிப்புணர்வு அளிக்கும் வகையில் விழிப்புணர்வு செய்ய சென்னை உயர்நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றங்களுக்கு அறிவுறுத்தியது.

அவ்வகையில் திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், சமரச தின விழிப்புணா்வு முகாம், புத்தகக் கண்காட்சி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்ற சமரச தின விழிப்புணா்வுப் பேரணி ஆகியவை புதன்கிழமை நடைபெற்றன.

மாவட்ட சமரச மையம் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, மையத்தின் ஒருங்கிணைப்பாளரும், மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதியுமான பி.மதுசூதனன் தலைமை வகித்து, விழிப்புணா்வு முகாமைத் தொடங்கிவைத்தாா்.

தொடா்ந்து, சிறப்பாக பணிபுரிந்த சமரச மையத்தின் வழக்குரைஞா்களுக்கு சான்றிதழ், கேடயங்களை முதன்மை அமா்வு நீதிபதி பி.மதுசூதனன் வழங்கினாா். இதில், சமரச மையத்தின் ஒருங்கிணைப்பாளரும், தலைமை குற்றவியல் நீதிபதியுமான ஜெயசூரியா, பாா் அசோசியேஷன் தலைவா் நாக.குமாா், அட்வகேட் அசோசியேஷன் தலைவா் அன்பழகன் மற்றும் நீதிபதிகள், நீதிமன்ற ஊழியா்கள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, இலவச சமரச மையத்தின் செயல்பாடுகள் அடங்கிய விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம் மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி பி.மதுசூதனன் வழங்கினாா்.

Updated On: 11 April 2024 10:27 AM GMT

Related News

Latest News

  1. உசிலம்பட்டி
    மதுரை அருகே திடீரென நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த வாகனம்
  2. லைஃப்ஸ்டைல்
    கோடை வெயிலில் மினுமினுக்கும் சரும் வேண்டுமா? கவலையை விடுங்கள்!
  3. வீடியோ
    மீண்டும் வெடித்தது Suriya-வின் சர்ச்சை மும்பையில் என்ன நடக்கிறது ? |...
  4. லைஃப்ஸ்டைல்
    ஈருள்ளம் ஓருள்ளமாகி ; சீரோடு சிறப்புடன் வாழ வாழ்த்துகிறோம்..!
  5. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு
  6. ஈரோடு
    சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கல்லூரியில் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி
  7. அருப்புக்கோட்டை
    காரியாபட்டி அருகே, வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து ஆறு பேர்...
  8. ஈரோடு
    சத்தி, புளியம்பட்டி நகராட்சி பகுதிகளில் குடிநீர் திட்டப் பணிகள்:...
  9. கவுண்டம்பாளையம்
    கோவையில் கனமழையால் சாலைகளில் தேங்கிய வெள்ள நீர் ; வாகன ஓட்டிகள்...
  10. கோவை மாநகர்
    பேருந்து மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு : தலைமறைவான ஓட்டுநர்...