Begin typing your search above and press return to search.
தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா
தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது; கடந்த 24 மணி நேரத்தில் 831 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 831 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 5,99,655 நபர்கள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு அதில் 30,490 நபர்களுக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், இதுவரை 26,805 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது, 3,340 நபர்கள் கொரோனா சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தஞ்சை மாவட்டத்தில், கடந்த 24 மணி நேரத்தில் 4,729 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 831 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.