முப்படை தளபதி பிபின் ராவத் மறைவு: தென்காசியில் இந்து அமைப்புகள் அஞ்சலி
தென்காசி நகர இந்து முன்னணி சார்பில் பொதுக்குழு உறுப்பினர் இசக்கிமுத்து தலைமையில் காந்தி சிலை அருகே அஞ்சலி செலுத்தப்பட்டது.
HIGHLIGHTS
நீலகிரியில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் ராணுவ தளபதி உட்பட 13 பேர் உயிரிழந்தனர். அவர்களுக்கு நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம் தென்காசி நகர இந்து முன்னணி சார்பில் பொதுக்குழு உறுப்பினர் இசக்கிமுத்து தலைமையில் காந்தி சிலை அருகே அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் நகரத் தலைவர் நாராயணன், பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் ராமராஜா, இந்து முன்னணியின் மாநில வழக்கறிஞர் பிரிவு துணைத் தலைவர் சாக்ரடீஸ், முன்னாள் கவுன்சிலர் சங்கர சுப்பிரமணியன், இந்து மக்கள் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சக்தி பாண்டியன், மாவட்ட தலைவர் கண்ணன் மாவட்ட துணைத்தலைவர் முத்துக்குமார், விசுவ இந்து பரிசத் மாவட்ட செயலாளர் தலைவாய் பஜ்ரங்தள் நகர தலைவர் சபரிமணி தலைவர் சுப்பிரமணியன் மற்றும் தென்காசி நகர பொதுமக்களும் கலந்துகொண்டனர்.