/* */

சிறுமியிடம் சில்மிஷம்: 'பெரிசு'க்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை

புதுக்கோட்டை அருகே, சிறுமியிடம் சில்மிஷம்: 'பெரிசு'க்கு 5 ஆண்டு கடுங்காவல்

HIGHLIGHTS

சிறுமியிடம் சில்மிஷம்:  பெரிசுக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை
X

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விராலிமலை வேலூர் கிராமத்தில், 22.9.2020 அன்று 66 வயது நிரம்பிய சின்ன காளை என்ற சேவுகன், 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக, பெற்றோரிடம் சிறுமி தெரிவித்துள்ளார். சிறுமியின் பெற்றோர், கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் வழங்கினர். அப்போதைய காவல் நிலைய ஆய்வாளர் கவிதா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

இதில், பாலியல் ரீதியாக சேவுகன் குற்றம் செய்ததை கண்டுபிடித்த, காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் சிறுமி வழக்கு என்பதால் இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இவ்வழக்கில், விசாரணைகள் நிறைவு பெற்று, இன்று தீர்ப்பு வழங்கிய மகிலா நீதிமன்ற நீதிபதி சத்யா, 66 வயது நிரம்பிய சின்னக்காளை என்ற சேவுகனை குற்றவாளி என்றும், சம்பந்தப்பட்ட நபருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிப்பதாக தீர்ப்பு வழங்கினார்.

மேலும், தமிழக அரசுக்கு சிறுமியின் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு, 2 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று, தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தார்.

Updated On: 4 May 2021 1:17 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பக்ரீத் வாழ்த்து சொல்வோம் வாங்க..!
  2. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 232 கன அடியாக அதிகரிப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை வாழ்த்துக்கள் தமிழ்: 50 பொன்மொழிகளுடன்
  4. உலகம்
    இந்தியா நிலவில் தரையிறங்கியபோது பாகிஸ்தானில் நடந்தது என்ன? வைரலான...
  5. சினிமா
    கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்
  6. காஞ்சிபுரம்
    மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுற்றி சுற்று சுவர் அமைக்க
  7. குமாரபாளையம்
    கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2740 கோழிகள் தீயில் கருகி...
  8. கோவை மாநகர்
    கேரளா திரைப்பட தயாரிப்பாளர் ஜானி சகாரிகாவை மோசடி வழக்கில் கைது செய்த...
  9. இந்தியா
    வாரணாசியில் வேட்பு மனு நிராகரிப்பு: அழுவதா? சிரிப்பதா? என நகைச்சுவை...
  10. தேனி
    துாய்மைப்பணியாளரின் அன்புள்ளம்..!