பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 232 கன அடியாக அதிகரிப்பு

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 232 கன அடியாக அதிகரிப்பு

பவானிசாகர் அணை.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 209 கன அடியிலிருந்து 232 கன அடியாக அதிகரித்துள்ளது.

பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 209 கன அடியிலிருந்து 232 கன அடியாக அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய அணையாக விளங்கும் பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டதாகும்.

இந்நிலையில், தற்போது அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று (மே.15) புதன்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 209 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (மே.16) வியாழக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 232 கன அடியாக அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 5 கன அடி நீரும், பவானி ஆற்றில் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 200 கன அடி நீரும் என மொத்தம் வினாடிக்கு 205 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 44.35 அடியாகவும், நீர் இருப்பு 3.21 டிஎம்சியாகவும் உள்ளது. மேலும், அணைப் பகுதியில் 3.6 மி.மீ மழைப்பொழிவு பதிவாகி உள்ளது.

Tags

Next Story