/* */

எருமப்பட்டி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி உயிரிழப்பு

எருமப்பட்டி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

HIGHLIGHTS

எருமப்பட்டி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி உயிரிழப்பு
X

பைல் படம்

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அருகே உள்ள வரதராஜபுரத்தை சேர்ந்தவர் முத்தையா (53), கூலித்தொழிலாளி. இவர் தனது சொந்த வேலை காரணமாக கஞ்சம்பட்டிக்கு டூ வீலரில் சென்று கொண்டிருந்தார்.

கஸ்தூரிபட்டி புதூர் அருகே அவர் சென்றபோது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத மோட்டார் வாகனம், டூ வீலர் மீது மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில், தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி முத்தையா உயிரிழந்தார். இதுகுறித்து எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 20 Jun 2022 2:45 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்