/* */

நாமக்கல் பகுதியில் டூ வீலர் திருடிய 4 பேர் கைது; 6 வாகனங்கள் மீட்பு

நாமக்கல் நகரில், டூ வீலர்கள் திருடிய 4 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 4 டூ வீலர்களை மீட்டனர்.

HIGHLIGHTS

நாமக்கல் பகுதியில் டூ வீலர் திருடிய 4 பேர் கைது; 6 வாகனங்கள் மீட்பு
X

சித்தரிப்பு காட்சி

நாமக்கல் பகுதியில் பல்வேறு இடங்களில் டூ வீலர்கள் திருட்டு அடிக்கடி நடைபெறுகிறது. இதையொட்டி, மாவட்ட எஸ்.பி சரோஜ்குமார் தாக்கூர் உத்திரவின்பேரில், இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் தலைமையில், போலீசார் அடிக்கடி வாகனச்சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவ்வகையில், நாமக்கல்- துறையூர் ரோட்டில் உள்ள அண்ணாநகர் பகுதியில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக 2 டூவீலர்களில், சந்தேகப்படும்படியாக வந்த 4 பேரை தடுத்து நிறுத்தி, விசாரணை செய்தனர். அப்போது, அவர்கள் நாமக்கல் மேட்டுத்தெருவை சேர்ந்த பாலாஜி சாய் (23), எருமப்பட்டி பிரகாஷ் (21), சேந்தமங்கலம் தினகரன் (22) மற்றும் கணேசபுரத்தை சேர்ந்த 18 வயது சிறுவன் ஒருவன் என்பது தெரியவந்தது.

அவர்கள் ஓட்டி வந்தது, திருடப்பட்ட டூ வீலர்கள் என்பதும், நாமக்கல் பகுதியில், பல்வேறு இடங்களில் டூ வீலர்கள் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையொட்டி, போலீசார் அவர்களை கைது செய்து, அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் திருட்டுப்போன 6 டூ வீலர்களை பறிமுதல் செய்தனர்.

Updated On: 10 Dec 2021 7:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகை சுவாரஸ்யங்களும் வாழ்த்துக்களும்
  2. ஆன்மீகம்
    முதல் வணக்கம் எங்கள் முதல்வனுக்கு! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
  3. பட்டுக்கோட்டை
    கோடை பெருமழையில் இருந்து பயிர் பாதுகாப்பு..! விவசாயிகளே கவனிங்க..!
  4. திருவள்ளூர்
    பெரியபாளையம் அருகே எண்ணெய் ஏற்றி வந்த லாரி தடுப்பு சுவரில் மோதி...
  5. நாமக்கல்
    சாலை விபத்தில் சிக்கியவரை தனது காரில் அனுப்பி வைத்த நாமக்கல் ஆட்சியர்...
  6. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி. அலுவலகத்தில் தஞ்சம் அடைந்த காதல்...
  7. சோழவந்தான்
    சோழவந்தானில், தனியார் பள்ளியில் சலுகைகளுடன் மாணவர் சேர்க்கை..!
  8. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, அதிமுக சார்பில் இலவச மருத்துவ முகாம்..!
  9. வீடியோ
    🥳Adhi-யின் 25வது படம் கொண்டாட்டத்தில் PT Sir குழுவினர்🥳 !#hiphop...
  10. ஆன்மீகம்
    தன்மானம் சீண்டப்படும்போது..துணிந்து நில்லுங்கள்..!