/* */

கோவை மாணவிக்கு பாலியல் தொல்லை: தெலுங்கானா மாநில பயிற்சியாளர் கைது

கோவையை சேர்ந்த தனியார் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த, தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பயிற்சியாளரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

HIGHLIGHTS

கோவை மாணவிக்கு பாலியல் தொல்லை: தெலுங்கானா மாநில பயிற்சியாளர் கைது
X

பைல் படம்.

நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், கடந்த டிசம்பர் மாதம் 8-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை பல்வேறு மாநில சி.பி.எஸ்.சி. பள்ளி மாணவர்கள் பங்கேற்ற டேக்வாண்டோ விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. அதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் 800-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விளையாடினர். அதற்காக அந்த பள்ளி வளாகத்தில் மாணவ மாணவிகளுக்கு தனித்தனியாக தங்கும் வசதி ஏற்படுத்தித் தரப்பட்டது.

அந்த போட்டியில் பங்கேற்க கோயமுத்தூர் தனியார் பள்ளியில் பிளஸ் படிக்கும், 16 வயது மாணவி தனது தந்தையுடன் வந்துள்ளார். பின்னர் மாணவியும், அவரது தந்தையும் தனித்தனி விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே தெலுங்கானா மாநிலத்தில் இருந்து மாணவியுடன், பயிற்சியாளராக அங்கோத்து லக்ஷ்மன் என்பவர் வந்துள்ளார். அவர் கோவையைச் சேர்ந்த பிளஸ்-1 மாணவியிடம், நீ அழகாக இருக்கிறாய், உனக்கு நன்கு பயிற்சி அளித்து அதிக பதக்கங்களை பெற வைப்பேன் என ஆசை வார்த்தை கூறி, தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி உள்ளார். அதற்கு மாணவி மறுத்துள்ளார்ர். இதனிடையே டிசம்பர் மாதம் 9-ம் தேதி இரவு 9 மணியளவில் தான் தங்கிருந்த விடுதியில் இருந்து, தந்தையை பார்க்க மாணவி சென்றுளார். அப்போது அங்கிருந்த, பயிற்சியாளர் அங்கோத்து லக்ஷ்மன், மாணவியின் கையைப் பிடித்து இழுத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பின்னர் இதை வெளியே சொல்லக்கூடாது என கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் பயந்துபோன மாணவி, இது குறித்து அவர்களது பெற்றோர்களிடம் எந்த தகவலையும் கூறவில்லை.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த மாணவிக்கு, திடீரென்று உடல்நலம் சரியில்லாமல் போனது. அவரது பெற்றோர்கள் அவரை கோவையில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு அழைத்தச்சென்று, பரிசோதனை செய்துள்ளனர். அப்போது அந்த மாணவி 2 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், மாணவியிடம் விசாரித்துள்ளனர். அப்போது தெலுங்கானா பயிற்சியாளர் தன்னை பலாத்காரம் செய்ததாக மாணவி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அந்த மாணவியின் பெற்றோர் கோவையில் இருந்து, நாமக்கல் வந்து, நாமக்கல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் பூர்ணிமா தலைமையிலான போலீசார் இதுகுறித்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் தெலுங்கானாவை சேர்ந்த பயிற்சியாளர் அங்கோத்து லக்ஷ்மன் மாணவியை பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் செய்தனர். மாஜிஸ்திரேட் உத்தரவின்பேரில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Updated On: 11 Feb 2023 10:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...