Begin typing your search above and press return to search.
நாமக்கல்லில் திருநங்கைளுக்கு ரேஷன் கார்டு வழங்க நாளை சிறப்பு முகாம்
நாமக்கல் மாவட்டத்தில் திருநங்கைகளுக்கு ரேசன் கார்டு வழங்குவதற்கான சிறப்பு முகாம் நாளை நடைபெறுகிறது.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டத்தில் திருநங்கைகளுக்கு ரேசன் கார்டு வழங்குவதற்கான சிறப்பு முகாம் நாளை நடைபெறுகிறது.
இது குறித்து கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாமக்கல் மாவட்டத்தில் வசித்து வரும் திருநங்கைகளுக்கு புதிய ரேசன் கார்டுகள் வழங்கும் சிறப்பு முகாம் நாளை 8ம் தேதி,மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுக்கா வழங்கல் அலுவலகங்களிலும் நடைபெற உள்ளது. இதுவரை ரேசன் கார்டுபெறாத திருநங்கைகள் போட்டோ, ஆதார் அட்டை, திருநங்கைகளுக்கான அடையா அட்டை மற்றும் இருப்பிட ஆதாரச் சான்றுடன் சம்மந்தப்பட்ட தாலுக்காவில் உள்ள வழங்கல் அலுவலகத்திற்கு சென்று மனு அளித்து புதிய ஸ்மார்ட் ரேசன் கார்டு பெறலாம் என்று தெரிவித்துள்ளார்.