Begin typing your search above and press return to search.
எஸ்.வாழவந்தி புன்னைவன நாதீஸ்வரர் கோயிலில் 108 சங்காபிசேகவிழா
மோகனூர் அருகே ஈஸ்வரன் கோயிலில், உலக நன்மைக்காக, 108 சங்காபிசேகம் நடைபெற்றது.
HIGHLIGHTS
மோகனூர் அருகே உள்ள எஸ்.வாழவந்தியில் உள்ள, பிரசித்திபெற்ற புன்னைவன நாதீஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு கார்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு, உலக நன்மை வேண்டி, சுவாமிக்கு சிறப்பு யாகம் நடைபெற்றது. தொடர்ந்து 108 வலம்புரி சங்காபிசேகம் நடைபெற்றது.
பின்னர் சுவாமிக்கு, பால், தயிர், இளநீர், மஞ்சள் மற்றும் பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிசேக ஆராதனைகள் நடைபெற்றது, சாமிக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்று, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் கொரோனா நடைமுறையைப் பின்பற்றி, சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.