Begin typing your search above and press return to search.
நாமக்கல் நகராட்சிப் பகுதிகளில் நாளை மின்தடை கிடையாது
நாமக்கல் நகராட்சிப் பகுதியில் நாளை அறிவிக்கப்பட்ட மின்சாரத்தடை ரத்து செய்யப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
நாமக்கல் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை 29ம் தேதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார விநியோகம் தடை செய்யப்படும் என ஏற்கனவே மின்சார வாரியம் அறிவிப்பு செய்திருந்தது.
இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. நாமக்கல் நகராட்சித் தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வருகிறது. இதனால் நாளை 29ம் தேதி நாமக்கல் நகராட்சிப் பகுதியில் மின்சார விநியோம் தடை செய்யப்படாது.
மின்தடை உள்ள பகுதிகள்
இருப்பினும், புறநகர்ப்பகுதிகளான வகுரம்பட்டி, வசந்தபுரம், வேப்பநத்தம், ரெட்டிப்பட்டி, தூசூர், வீசானம் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.