/* */

நாமக்கல் நகராட்சியில் பெண்களின் ராஜ்ஜியம்- 39ல் 20 பேர் மகளிர்

நாமக்கல் நகராட்சி பெண்கள் ராஜ்ஜியம் ஆனது. மொத்தமுள்ள 39 வார்டுகளில், 20 பெண் கவுன்சிலர்கள் வெற்றிபெற்றுள்ளனர். 19 பேர் ஆண் கவுன்சிலர்கள்.

HIGHLIGHTS

நாமக்கல் நகராட்சியில் பெண்களின்  ராஜ்ஜியம்- 39ல் 20 பேர் மகளிர்
X

நாமக்கல் நகராட்சியில் வெற்றிபெற்ற கவுன்சிலர்கள், கமிஷனர் சுதா முன்னிலையில் குரூப் போட்டோ எடுத்துக்கொண்டனர். (கவுன்சிலர்களில் 20 பேர் பெண்கள், 19 பேர் ஆண்கள்)

தமிழகத்தில் உள்ளாட்சித்தேர்தலில் 33 சதவீதம் பெண்களுக்கான இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் எஸ்.சி பிரிவிற்கான ஒதுக்கீட்டிலும் பெண்களுக்கு தனியாக இடம் ஒதுக்கப்படுகிறது. நாமக்கல் நகராட்சித் தேர்தலில் மொத்தம் உள்ள 39 வார்டுகளிலும், திமுக கவுன்சிலர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அதில் 20 வார்டுகளில் பெண்கள் வெற்றி பெற்றுள்ளனர். ஆண்கள் 19 வார்டுளில் வெற்றி பெற்றுள்ளனர்.

வெற்றி பெற்ற பெண் கவுன்சிலர்கள் விபரம்: 1வது வார்டு சத்தியவதி, 2வது வார்டு சங்கீதா, 4வது வார்டு சசிகலா, 7வது வார்டு கிருஷ்ணபிரியா, 8வது வார்டு அம்சா, 13வது வார்டு பர்கத்துனிசா, 14வது வார்டு நளினி, 17வது வார்டு கலைச்செல்வி, 18வது வார்டு இந்திராணி, 24வது வார்டு நந்தினிதேவி, 25வது வார்டு ஸ்ரீதேவி, 26வது வார்டு சகுந்தலா, 27வது வார்டு ரூபா, 28வது வார்டு லீலாவதி, 29வது வார்டு ரோஜாரமணி, 31வது வார்டு ஜெயமணி, 32வது வார்டு சரோஜா, 33வது வார்டு கிருஷ்ணலட்சுமி, 35வது வார்டு கமலா, 37வது வார்டு லட்சுமி. ஆக மொத்தம் 20 வார்டுகளில் பெண் கவுன்சிலர்கள் வெற்றிபெற்று பதவியேற்றுள்ளனர்.

தற்போது நகராட்சி கமிஷனராக சுதா பணியாற்றி வருகிறார். இதனால் நகராட்சிக் கூட்டம் நடைபெறும்போது 21 பெண்கள் கூட்டத்தில் இருப்பார்கள். நாமக்கல் நகராட்சி பெண்கள் ராஜ்ஜியமாக மாறியுள்ளது. நாளை 4ம் தேதி நகராட்சித் தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் நடைபெறுகிறது. நகராட்சியில் உள்ள 39 வார்டுகளையும் திமுக கைப்பற்றியுள்ளதால், திமுக சார்பில் நகராட்சித் தலைவர் பதவி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கலாநிதி, நகராட்சித் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதியாகிவிட்டது. அதைத் தொடர்ந்து துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறும்.

Updated On: 3 March 2022 12:45 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  2. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  3. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  4. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  5. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  6. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  7. திருப்பரங்குன்றம்
    கூடலகப் பெருமாள் கோயில், வைகாசிப் பெருந் திருவிழா!
  8. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  9. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  10. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...