நாமக்கல் நகராட்சியில் பெண்களின் ராஜ்ஜியம்- 39ல் 20 பேர் மகளிர்
நாமக்கல் நகராட்சி பெண்கள் ராஜ்ஜியம் ஆனது. மொத்தமுள்ள 39 வார்டுகளில், 20 பெண் கவுன்சிலர்கள் வெற்றிபெற்றுள்ளனர். 19 பேர் ஆண் கவுன்சிலர்கள்.
HIGHLIGHTS
தமிழகத்தில் உள்ளாட்சித்தேர்தலில் 33 சதவீதம் பெண்களுக்கான இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் எஸ்.சி பிரிவிற்கான ஒதுக்கீட்டிலும் பெண்களுக்கு தனியாக இடம் ஒதுக்கப்படுகிறது. நாமக்கல் நகராட்சித் தேர்தலில் மொத்தம் உள்ள 39 வார்டுகளிலும், திமுக கவுன்சிலர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அதில் 20 வார்டுகளில் பெண்கள் வெற்றி பெற்றுள்ளனர். ஆண்கள் 19 வார்டுளில் வெற்றி பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்ற பெண் கவுன்சிலர்கள் விபரம்: 1வது வார்டு சத்தியவதி, 2வது வார்டு சங்கீதா, 4வது வார்டு சசிகலா, 7வது வார்டு கிருஷ்ணபிரியா, 8வது வார்டு அம்சா, 13வது வார்டு பர்கத்துனிசா, 14வது வார்டு நளினி, 17வது வார்டு கலைச்செல்வி, 18வது வார்டு இந்திராணி, 24வது வார்டு நந்தினிதேவி, 25வது வார்டு ஸ்ரீதேவி, 26வது வார்டு சகுந்தலா, 27வது வார்டு ரூபா, 28வது வார்டு லீலாவதி, 29வது வார்டு ரோஜாரமணி, 31வது வார்டு ஜெயமணி, 32வது வார்டு சரோஜா, 33வது வார்டு கிருஷ்ணலட்சுமி, 35வது வார்டு கமலா, 37வது வார்டு லட்சுமி. ஆக மொத்தம் 20 வார்டுகளில் பெண் கவுன்சிலர்கள் வெற்றிபெற்று பதவியேற்றுள்ளனர்.
தற்போது நகராட்சி கமிஷனராக சுதா பணியாற்றி வருகிறார். இதனால் நகராட்சிக் கூட்டம் நடைபெறும்போது 21 பெண்கள் கூட்டத்தில் இருப்பார்கள். நாமக்கல் நகராட்சி பெண்கள் ராஜ்ஜியமாக மாறியுள்ளது. நாளை 4ம் தேதி நகராட்சித் தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் நடைபெறுகிறது. நகராட்சியில் உள்ள 39 வார்டுகளையும் திமுக கைப்பற்றியுள்ளதால், திமுக சார்பில் நகராட்சித் தலைவர் பதவி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கலாநிதி, நகராட்சித் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதியாகிவிட்டது. அதைத் தொடர்ந்து துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறும்.