/* */

நாமக்கல் அருகே மின்சாரம் தாக்கியதில் கூலித்தொழிலாளி உயிரிழப்பு

நாமக்கல் அருகே மின்சாரம் தாக்கி கூலித்தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

HIGHLIGHTS

நாமக்கல் அருகே மின்சாரம் தாக்கியதில் கூலித்தொழிலாளி உயிரிழப்பு
X

நாமக்கல் அருகே மின்சாரம் தாக்கி கூலித்தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள கதிராநல்லூரை சேர்ந்தவர் கணபதி (52). கூலித்தொழிலாளி. இவருடைய தம்பி விஜயகுமார் (38). இவர் புதிதாக வீடு கட்டி உள்ளார். அந்த வீட்டிற்கு அவர்களுக்கு சொந்தமான பழைய வீட்டில் இருந்து மின்இணைப்பு கொடுப்பதற்காக கணபதி பழைய வீட்டில் வயரை மாட்டி உள்ளார்.

ஆனால் மெயின் சுவிட்ச்சை ஆப் ஆப் செய்யாமல் கவனக் குறைவாக வயரில் உள்ள கம்பியை எடுப்பதற்காக வாயில் வைத்து கடித்து உள்ளார். இதனால் அவர் மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தார். உயிருக்கு போராடிய கணபதியை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து விஜயகுமார் புதுச்சத்திரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 31 Dec 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    2024-ல் மருத்துவ உலகை புரட்டிப்போடும் சிறந்த படிப்புகள்
  2. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்கள்: அன்பைப் பொழிந்து, மகிழ்ச்சியைச் சொல்லும்...
  3. லைஃப்ஸ்டைல்
    "குட் நைட்" மட்டும் சொல்லாதீங்க! தமிழ்ல இப்படி சொல்லுங்க!
  4. வீடியோ
    மயிலாடுதுறையில் பலத்த காற்றுடன் மழை ! 50 ஆண்டுகள் பழமையான புளியமரம்...
  5. லைஃப்ஸ்டைல்
    என் அப்பா, என் பெருமை! பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    என்னில் பாதியானவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 207 கன அடியாக அதிகரிப்பு
  8. லைஃப்ஸ்டைல்
    பக்ரீத் வாழ்த்து சொல்வோம் வாங்க..!
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 232 கன அடியாக அதிகரிப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை வாழ்த்துக்கள் தமிழ்: 50 பொன்மொழிகளுடன்