பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எல்ஐசி முகவர்கள் போராட்டம்
மோகனூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எல்ஐசி முகவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
HIGHLIGHTS
மோகனூர் எல்ஐசி அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஜெண்டுகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மோகனூரில் உள்ள எல்ஐசி சாட்டிலைட் கிளை அலுவலம் முன்பு, எல்ஐசி ஏஜெண்டுகள் சங்கங்களின் கூட்டுக் குழு சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. சங் க நிர்வாகிகள் தங்கவேல், சுப்பிரமணியன், ஞானவள்ளி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாலிசிதாரர்களின் போனசை உயர்த்த வேண்டும், ஜிஎஸ் டி நீக்க வேண்டும், கிராஜுவிட்டியை உயர்த்த வேண்டும், குழு காப்பீட்டை உயர்த்த வேண்டும்,அனைத்து ஏஜெண்டுகளுக்கும் மருத்துவ இன்சூரன்ஸ் வழங்க வேண்டும், நேரடி ஏஜெண்டுகளுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும், முகவர் நலநிதியம் அமைக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற தர்ணா போராட்டத்தில் ஏராளமான எல்ஐசி ஏஜெண்டுகள் கலந்துகொண்டனர்.