நாமக்கல் மாவட்டத்தில் 28ம் தேதி இலவச வெறிநாய் தடுப்பூசி முகாம்
நாமக்கல் மாவட்டத்தில் வரும் 28ம் தேதி செல்லப்பிராணிகளுக்கு இலவச வெறிநாய் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டத்தில் வரும் 28ம் தேதி செல்லப்பிராணிகளுக்கு இலவச வெறிநாய் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.
இது குறித்து மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வரும் 28ம் தேதி உலக வெறிநாய்க்கடி தடுப்புத் தினத்தை முன்னிட்டு, நாமக்கல் கால்நடை பராமரிப்புத்துறை, கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் நாமக்கல் ரோட்டரி கிளப் ஆகியவை இணைந்து மாவட்டம் முழுவதும் வெறிநாய்க்கடி தடுப்பூசி முகாம் நடத்தப்படவுள்ளது.
அதுசமயம் கால்நடை பராமரிப்புத்துறையின் கீழ் செயல்படும் அனைத்து (105) கால்நடை மருந்தகங்கள், 5 கால்நடை மருத்துவமனைகள் மற்றும் நாமக்கல் திருச்சி ரோட்டில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்திலும், வரும் 28ம் தேதி காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை செல்லப்பிராணிகளுக்கு வெறிநாய் தடுப்பூசி இலவசமாக போடப்படும். இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.