Begin typing your search above and press return to search.
நாமக்கல்லில் வரி செலுத்தாமல் இயக்கிய 10 லாரிகள் பறிமுதல்
நாமக்கல் பகுதியில் வரி செலுத்தாமல் இயக்கிய 10 லாரிகளை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
HIGHLIGHTS
நாமக்கல் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன், மோட்டார் வாகன ஆய்வாளர் உமா மகேஸ்வரி ஆகியோர், நாமக்கல் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அரசுக்கு முறையாக வரி செலுத்தாமலும், எப்.சி சான்றிதழை புதுப்பிக்காமலும் இயக்கப்பட்டு வந்த 10 லாரி களை பறிமுதல் செய்தனர். அந்த லாரிகள் அனைத்தும் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக லாரி உரிமையாளர்களுக்கு ரூ.2.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. இது போன்ற சோதனைகள் தொடர்ந்து நடத்தப்படும் எனவும், வரி செலுத்தாமலும், எப்.சி., சான்றிதழ் புதுப்பிக்காமலும் லாரிகளை இயக்கினால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அபராதம் வசூலிக்கப்படும் என்று ஆர்டிஓ எச்சரிக்கை விடுத்துள்ளார்.