நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக உட்கட்சி தேர்தல் நிறைவு
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக உட்கட்சி தேர்தல் நிறைவு பெற்றது
HIGHLIGHTS
திமுக தலைமை அறிவிப்பின்படி, நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.கவின் 15-வது பொதுத்தேர்தலில் 4 நகரங்கள், 11 டவுன் பஞ்சாயத்துக்கள் உட்பட 237 வார்டுகளில், 236 வார்டுகளுக்கான, உட்கட்சி தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இதையொட்டி வெற்றி பெற்றவர்களுக்கு முடிவு சான்றிதழ்கள் வழங்கும் விழா, கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்றது.
திமுக மாவட்ட தேர்தல் அலுவலர் குத்தாலம் அன்பழகன் முன்னிலை வகித்தார். கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் ராஜேஷ்குமார் எம்.பி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு செயலாளர்களுக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிழதழ்கள் மற்றும் தீர்மான நோட்டு புத்தகங்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் நாமக்கல் நகர திமுக பொறுப்பாளர்கள் பூபதி, சிவகுமார், ராணா ஆனந்த், ராசிபுரம் நகர செயலாளர் சங்கர், ஒன்றிய செயலாளர்கள் நாமக்கல் பழனிவேல், மோகனூர் நவலடி, எருமப்பட்டி பாலசுப்ரமணியம், வெண்ணந்தூர் துரைசாமி, ராசிபுரம் ஜெகநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.