Begin typing your search above and press return to search.
நாமக்கல்லில் வரும் 10ம் தேதி சமையல் கேஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
நாமக்கல் மாவட்ட சமையல் கேஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம் வரும் 10ம் தேதி நடைபெறுகிறது.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்ட சமையல் கேஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம் வரும் 10ம் தேதி நடைபெறுகிறது.
இது குறித்து மாவட்ட டிஆர்ஓ கதிரேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- நாமக்கல் மாவட்டத்தில் சமையல் கேஸ் நுகர்வோர் நலன் கருதி, அனைத்து கேஸ் நிறுவன ஏஜண்டுகள், விநியோகஸ்தர்கள், சமையல் கேஸ் நுகர்வோர் மற்றும் தன்னார்வலர்களுடன், சமையல் கேஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம் வருகிற 10ம் தேதி காலை 11 மணிக்கு, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. டிஆர்ஓ கதிரேசன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து சமையல் கேஸ் நுகர்வோரின் குறைகளை கேட்டறிகிறார். சமையல் கேஸ் விநியோகம் தொடர்பான குறைபாடுகள் மற்றும் கோரிக்கைகளைத் தெரிவிக்க விரும்புவோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு, தங்களின் கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.