உண்டு உறைவிட பள்ளிகளில் படிக்க மாணவர்களுக்கு கலெக்டர் அனுமதி
உண்டு உறைவிட பள்ளிகளில் சேர்ந்து படிக்க மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் அனுமதி உத்தரவுகளை வழங்கினார்.
HIGHLIGHTS
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 6ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை படிக்க ஆகும் செலவினம் முழுவதையும் அரசே ஏற்கும் திட்டத்தின் கீழ் சிறந்த உண்டு, உறைவிட பள்ளிகளில் சேர்ந்து படிக்க மாணவ, மாணவிகளுக்கு அனுமதி உத்தரவுகளை கலெக்டர் ஸ்ரேயா சிங் வழங்கினார். இதில் திறனாய்வு தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட 14 மாணவ, மாணவிகளுக்கும், 11ம் வகுப்பில் சேர்ந்து தொடர்ந்து 12 ம் வகுப்பு வரை படிக்கும் திட்டத்தின் கீழ் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற்ற 10 மாணவ, மாணவிளுக்கும் உண்டு உறைவிட பள்ளிகளில் சேர்ந்து படிக்க மாணவ, மாணவிகளுக்கு அனுமதி உத்தரவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் டிஆர்ஓ துர்கா மூர்த்தி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் மரகதவள்ளி, சமூக பாதுகாப்புத் திட்ட சப்-கலெக்டர் ரமேஷ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.