Begin typing your search above and press return to search.
நாமக்கல் அருகே இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை: 3 இளைஞர்கள் கைது
நாமக்கல் அருகே இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், 3 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
HIGHLIGHTS
நாமக்கல் வீசாணத்தை சேர்ந்தவர்கள் தினேஷ்குமார் (எ) மணிகண்டன் (20), முரளி (21), நவீன்குமார் (21) மற்றும் வல்லரசு. இவர்கள் அதேபகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை கடந்த 19ம் தேதி கடத்திச்சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து நகை மற்றும் பணத்தை பறித்துச் சென்றுள்ளனர். இது சம்மந்தமாக நாமக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேஷ்குமார், முரளி, நவீன்குமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள வல்லரசுவை வலை வீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் நாமக்கல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.