சாதனை பெண்மணி விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
தேசிய பெண் குழந்தை தினமான ஜனவரி24 ம் தேதி, தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட உள்ள விருதிற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
HIGHLIGHTS
தேசிய பெண் குழந்தை தினமான ஜனவரி24 ம் தேதி, தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட உள்ள விருதிற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக அரசின் சார்பில் தேசிய பெண் குழந்தை தினமான ஜனவரி 24ம் தேதி, 2022-23 ஆம் ஆண்டிற்கான விருது வழங்கப்பட்ட உள்ளது. 13 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட தமிழகத்தில் வசிக்கும் பெண் குழந்தைகள் இந்த விருதிற்கு விண்ணப்பிக்கலாம். பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு,
பெண் குழந்தை திருமணத்தை தடுத்தல் மற்றும் தவிர்த்தல், வேறு ஏதாவது வகையில் சிறப்பான, தனித்துவமான சாதனை செய்திருத்தல், பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள், மூடநம்பிக்கைகள் ஆகியவற்றிற்கு தீர்வு காண்பதற்கு ஓவியங்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் மூலமாகவோ விழிப்புணர்வை ஏற்படுத்தியிருத்தல்,
ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்பது போன்ற செயல்களை பெண்களாலும் சாதிக்க முடியும் என்று சாதித்திருத்தல். போன்ற சாதனைகள் புரிந்த 13 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள் இந்த விருதிற்கு விண்ணப்பிக்கலாம். தகுதியானவர்கள் வருகிற நவ.15க்கும் மாவட்ட சமூகநல அலுவலருக்கு வந்துசேருமாறுவிண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.