/* */

வெண்ணந்தூர் அருகே கடத்தி வரப்பட்ட 1,500 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்

வெண்ணந்தூர் அருகில் கடத்தி வரப்பட்ட 1,500 கிலோ ரேசன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து, கடத்தி வந்தவரை கைது செய்தனர்.

HIGHLIGHTS

வெண்ணந்தூர் அருகே கடத்தி வரப்பட்ட 1,500 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்
X

வெண்ணந்தூர் அருகே மொபட்டில் ரேசன் அரிசி கடத்தியதாக, போலீசாரால் கைது செய்யப்பட்ட மோகன்.

நாமக்கல் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் எஸ்ஐ அகிலன் மற்றும் போலீசார் ராசிபுரம் தாலுக்கா வெண்ணந்தூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அரசமரம் பஸ் ஸ்டாப் அருகே உள்ள காலி இடத்தில் மூட்டை, மூட்டையாக ரேஷன்அரிசி கடத்தி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதை தொடர்ந்து 25 சாக்கு பைகளில் இருந்த 1,500 கிலோ ரேசன்அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், சேலம் மாவட்டம் சங்ககிரி தாலுக்கா ஆட்டையாம்பட்டி பகுதியைச் சேர்ந்த கார் டிரைவர் மோகன் (30) என்பவர் மொபட்டில் ரேசன்அரிசி மூட்டைகளை கடத்தி வந்து அங்கு வைத்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மோகனை கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மொபட்டையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 8 July 2022 2:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு டீ ஸ்பூன் நெய் : உடம்பு குறைய இது
  2. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
  3. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  4. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  5. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  7. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  8. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  9. ஈரோடு
    பவானி அருகே விபத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர் உயிரிழப்பு
  10. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!