நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி ஆர்பாட்டம்
நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம்.
கடந்த சில வாரங்களாக நூல் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து வருவதை கட்டுபடுத்திட வேண்டும், தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்த கூடாது, விசைத்தறி தொழிலாளர்களையும், தொழிலையும் பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கத்தினர் நூல் கோண்களுடனும், சாயமேற்றிய நூல்களை கையில் ஏந்தியும் நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அப்போது இந்திய பருத்தி கழகத்தின் சார்பில் தமிழகத்தில் கிடங்கு வசதி ஏற்படுத்தி நூல் இருப்பு வைத்து மலிவான விலையில் வழங்கிட வேண்டும், நூல் பதுக்களை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோசங்களை எழுப்பினர். அதனை தொடர்ந்து ஆட்சியரிடம் மனு அளித்தனர்.