ஜூலை 26ம் தேதி அஞ்சல் கோட்ட அளவிலான ஓய்வூதியர் குறைதீர்ப்பு கூட்டம்
கிருஷ்ணகிரியில், வரும் 26ம் தேதி அஞ்சல் கோட்ட அளவிலான ஓய்வூதியர்கள் சார்ந்த குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெறுகிறது.
HIGHLIGHTS
இது குறித்து, கிருஷ்ணகிரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் முனிகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி தலைமை அஞ்சல் அலுவலக வளாகத்தில் உள்ள, கிருஷ்ணகிரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில், வரும் 26,ம் தேதி காலை 10,மணியளவில் கோட்ட அளவிலான ஓய்வூதியர்கள் சார்ந்த குறைதீர்ப்பு நாள் கூட்டம் நடைபெறுகிறது.
ஓய்வூதியர்கள், தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருப்பின், தங்களது புகார்களை தபால் உறையின் மீது எழுதி, அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், கிருஷ்ணகிரி கோட்டம், கிருஷ்ணகிரி - 635001 என்ற விலாசத்திற்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும், ஓய்வூதியக்கணக்கு எண், ஓய்வூதியம் தொடர்பான பிற விவரங்கள் அனைத்தையும் முழுமையாக குறிப்பிட வேண்டும். நீங்கள் அனுப்பும் புகார்களில், ஓய்வூதியம் தொடர்பான குறைகளை முழு விவரங்களுடன் குறிப்பிட்டு எழுத வேண்டும். தங்கள் கடிதம் மேற்கண்ட முகவரிக்கு வருகிற 23ம் தேதிக்குள் வந்து சேருமாறு அனுப்ப வேண்டும். இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.