/* */

ஜூலை 26ம் தேதி அஞ்சல் கோட்ட அளவிலான ஓய்வூதியர் குறைதீர்ப்பு கூட்டம்

கிருஷ்ணகிரியில், வரும் 26ம் தேதி அஞ்சல் கோட்ட அளவிலான ஓய்வூதியர்கள் சார்ந்த குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெறுகிறது.

HIGHLIGHTS

ஜூலை 26ம் தேதி அஞ்சல் கோட்ட அளவிலான ஓய்வூதியர் குறைதீர்ப்பு கூட்டம்
X

இது குறித்து, கிருஷ்ணகிரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் முனிகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி தலைமை அஞ்சல் அலுவலக வளாகத்தில் உள்ள, கிருஷ்ணகிரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில், வரும் 26,ம் தேதி காலை 10,மணியளவில் கோட்ட அளவிலான ஓய்வூதியர்கள் சார்ந்த குறைதீர்ப்பு நாள் கூட்டம் நடைபெறுகிறது.

ஓய்வூதியர்கள், தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருப்பின், தங்களது புகார்களை தபால் உறையின் மீது எழுதி, அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், கிருஷ்ணகிரி கோட்டம், கிருஷ்ணகிரி - 635001 என்ற விலாசத்திற்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், ஓய்வூதியக்கணக்கு எண், ஓய்வூதியம் தொடர்பான பிற விவரங்கள் அனைத்தையும் முழுமையாக குறிப்பிட வேண்டும். நீங்கள் அனுப்பும் புகார்களில், ஓய்வூதியம் தொடர்பான குறைகளை முழு விவரங்களுடன் குறிப்பிட்டு எழுத வேண்டும். தங்கள் கடிதம் மேற்கண்ட முகவரிக்கு வருகிற 23ம் தேதிக்குள் வந்து சேருமாறு அனுப்ப வேண்டும். இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 10 July 2021 4:06 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை எதிர்கொள்ள காவல்துறையினருக்கு சன் கிளாஸ்
  2. நாமக்கல்
    நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ரத்ததானம் வழங்கல்
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. நாமக்கல்
    சூறாவளிக்காற்றால் மின்கம்பம் முறிந்தது; இருளில் மூழ்கிய கிராமம்
  5. வந்தவாசி
    தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நீர் மோர் பந்தல்
  6. திருவண்ணாமலை
    நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
  7. செய்யாறு
    பிளஸ் 1 பொதுத்தேர்வில் 88.91 சதவீதம் பேர் தேர்ச்சி
  8. செய்யாறு
    செய்யாற்றில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  9. வீடியோ
    மனமுருகி சொன்ன இஸ்லாமிய மாணவி | Annamalai சொன்ன அந்த வார்த்தை |...
  10. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து