பள்ளி பேருந்துகள் ஆய்வு: தகுதியற்ற பேருந்துகளை நிறுத்த ஆட்சியர் அறிவுரை
பள்ளிகளில் அனைத்து வகுப்புகளும் தொடங்க உள்ளதால், பேருந்துகளின் தகுதி குறித்து இன்று ஆய்வு நடைபெற்றது.
HIGHLIGHTS
வரும் 1 ம் தேதி முதல் பள்ளிகளில் முதல் வகுப்பு முதல் அனைத்து வகுப்புகளும் தொடங்கப்பட உள்ளது. இதையடுத்து, கரூரில் உள்ள 92 தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 463 பேருந்துகளும் இன்று வட்டார போக்குவரத்து அலுவலர்களால் ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் பள்ளி பேருந்துகளில் ஏறி நேரிடையாக ஆய்வு செய்தார். பல்வேறு குறைபாடு உள்ள பேருந்துகளை மாணவர்களை ஏற்றிச் செல்ல அனுமதிக்க வேண்டாம் என வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்
தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் கூறியதாவது:
கரூர் மாவட்டத்தில் 92 பள்ளிகளை சேர்ந்த 463 பேருந்துகள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பாதித்த காலத்துக்குப் பிறகு ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு இந்த பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்லும் வாகனங்களின் தகுதி குறித்து தற்போது சோதனை செய்யய்ப்படுகிறது.
பேருந்துகள் மாணவர்களை ஏற்றிச் செல்வதற்கு தகுதியாக உள்ளது குறித்த சோதனை செய்யப்படுகிறது. பேருந்துகள் சுத்தமாகவும், சுகாதாரமாக இருக்கிறதா என்று சோதனை செய்யபடுகிறது. அவசர கால வழி, தீயணைப்பு கருவிகள், முதலுதவிப் பெட்டி ஆகிய உள்ளதா என்று சோதிக்கப்படுகிறது. பள்ளி வாகனங்களில் சிசிடிவி கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. பல வாகனங்களில் குறைபாடுகள் கண்டறியப்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலர்களால் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.
அனைத்து பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு சரியாக உள்ள வாகனங்கள் மட்டுமே மாணவர்களை அழைத்துச் செல்ல பயன்படுத்த அனுமதிக்கப்படும் என்றார். தீயணைப்புத் துறையினர், தீ விபத்துகளை அணைப்பது மற்றும் விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி அளிப்பது குறித்து பேருந்து ஓட்டுநர்களுக்கு செயல் விளக்கம் காண்பிக்கப்பட்டது.