/* */

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை: குமரியில் 3 பேர் கைது

குமரியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை: குமரியில் 3 பேர் கைது
X

கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆறுமுகம் தலைமையில் போலீசார் வழுக்கம்பாறை சந்திப்பு பகுதியில், இன்று ரோந்து சென்றனர். அப்போது, சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த மூன்று நபர்களை பிடித்து விசாரணை செய்தனர். அவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது.

மேலும் விசாரணையில், அவர்கள் ராஜாவூர் பகுதியை சேர்ந்த அருண்ஜெனித் என்ற ஜெனித் (25) மற்றும் வழுக்கம்பாறை பகுதியை சேர்ந்த சதீஷ் (20) மற்றும் முத்துகிருஷ்ணன் (22) என்பது தெரியவந்தது. அவர்கள், கஞ்சா பதுக்கி வைத்து அந்த பகுதிகளில் விற்பனை செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார், 1.200 கிலோ கிராம் கஞ்சாவையும், விற்பனைக்கு பயன்படுத்திய மூன்று இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

Updated On: 28 Jan 2022 11:00 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    தெலுங்கானா போல் தமிழகத்திலும் காங்கிரஸ் ஆட்சி: செல்வ பெருந்தகை பேச்சு
  2. தேனி
    தேனியில் கொந்தளித்த டெல்லி அதிகாரி..!
  3. தொழில்நுட்பம்
    மோட்டோரோலா எட்ஜ் 50 பியூஷன் அறிமுகம்: விலை, சலுகைகள், அம்சங்கள்!
  4. திருவள்ளூர்
    மாற்றம் தொண்டு நிறுவனம் சார்பில் பழங்குடியின குழந்தைகளுக்கு
  5. திருப்பரங்குன்றம்
    மதுரையில் பேருந்துக்குள் மழை..! நனைந்த பயணிகள்..!
  6. ஈரோடு
    ஈரோட்டில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றம் தொடர்பான மாவட்ட அளவிலான குழுக்...
  7. நாமக்கல்
    ப.வேலூரில் போதை ஊசி, மாத்திரை விற்பனை? 7 பேர் கொண்ட கும்பல் கைது
  8. லைஃப்ஸ்டைல்
    எனக்காக பிறந்தவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  9. திருவள்ளூர்
    தேர்வில் மதிப்பெண் குறைந்ததை கண்டித்ததால் மாணவன் விஷம் குடித்து...
  10. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே பாம்பு கடித்து தண்ணீர் பாய்ச்ச சென்ற விவசாயி...