Begin typing your search above and press return to search.
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை: குமரியில் 3 பேர் கைது
குமரியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
HIGHLIGHTS
கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆறுமுகம் தலைமையில் போலீசார் வழுக்கம்பாறை சந்திப்பு பகுதியில், இன்று ரோந்து சென்றனர். அப்போது, சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த மூன்று நபர்களை பிடித்து விசாரணை செய்தனர். அவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது.
மேலும் விசாரணையில், அவர்கள் ராஜாவூர் பகுதியை சேர்ந்த அருண்ஜெனித் என்ற ஜெனித் (25) மற்றும் வழுக்கம்பாறை பகுதியை சேர்ந்த சதீஷ் (20) மற்றும் முத்துகிருஷ்ணன் (22) என்பது தெரியவந்தது. அவர்கள், கஞ்சா பதுக்கி வைத்து அந்த பகுதிகளில் விற்பனை செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார், 1.200 கிலோ கிராம் கஞ்சாவையும், விற்பனைக்கு பயன்படுத்திய மூன்று இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.