/* */

காஞ்சிபுரத்தில் உலக புகையிலை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி

World No Tobacco Day Awareness Rally- காஞ்சிபுரம் மாவட்ட பல் மருத்துவர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் உலக புகையிலை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி
X

உலக சுகாதார நிறுவனத்தால் ஒவ்வொரு ஆண்டும் உலக புகையிலை ஒழிப்பு தினம் மே மாதம் 31 ஆம் நாள் கடைபிடிக்கப்படுகிறது.

இந்நிலையில் இன்று மே 31 உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்ட இந்திய பல் மருத்துவச் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு பேரணியை சிவ காஞ்சி காவல் நிலைய ஆய்வாளர் வினாயகம் கொடி அசைத்து துவக்கி வைத்தார். காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் துவங்கிய இந்த பேரணி ராஜ வீதி, ரயில்வே சாலை உள்ளிட்ட காஞ்சிபுரம் மாநகரின் முக்கிய சாலைகள் வழியாக வந்து காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் நிறைவுபெற்றது.

இந்த விழிப்புணர்வு பேரணியில் புகையிலைக்கு எதிராக கோஷங்களை எழுப்பியும், துண்டு பிரசுரங்களையும் பொதுமக்களுக்கு வழங்கினர். விழிப்புணர்வு பேரணியில் தனியார் கல்லூரி மாணவ, மாணவியர்கள் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் இந்திய பல் மருத்துவ சங்கம் காஞ்சிபுரம் கிளை தலைவர் டாக்டர்.வித்யா தேவராஜன், செயலாளர் டாக்டர் N.சரவணன்,பொருளாளர் டாக்டர்.ஜெயந்தா பத்மநாபன், முகாம் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பிரியா பாலா, இணைச் செயலாளர் டாக்டர்.V.Kஜெயகரன், முன்னாள் தலைவர் டாக்டர்.P.சதீஷ்குமார்,முன்னாள் செயலாளர் டாக்டர்.S.R.கணேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Updated On: 31 May 2022 5:00 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    மோட்டோரோலா எட்ஜ் 50 பியூஷன் அறிமுகம்: விலை, சலுகைகள், அம்சங்கள்!
  2. திருவள்ளூர்
    மாற்றம் தொண்டு நிறுவனம் சார்பில் பழங்குடியின குழந்தைகளுக்கு
  3. திருப்பரங்குன்றம்
    மதுரையில் பேருந்துக்குள் மழை..! நனைந்த பயணிகள்..!
  4. ஈரோடு
    ஈரோட்டில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றம் தொடர்பான மாவட்ட அளவிலான குழுக்...
  5. லைஃப்ஸ்டைல்
    எனக்காக பிறந்தவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  6. திருவள்ளூர்
    தேர்வில் மதிப்பெண் குறைந்ததை கண்டித்ததால் மாணவன் விஷம் குடித்து...
  7. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே பாம்பு கடித்து தண்ணீர் பாய்ச்ச சென்ற விவசாயி...
  8. உசிலம்பட்டி
    மதுரை அருகே ,வயலில் சாக்கடை நீர் கலப்பா? பொதுமக்கள் ஆவேசம்!
  9. கோவை மாநகர்
    யானை வழித்தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற வேண்டும் : விவசாயிகள்...
  10. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர் சந்திப்பு ||...