இந்து முன்னணி தலைவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி எஸ்.டி.பி.ஐ. கட்சி மனு
SDPI Party- இந்து முன்னணி தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியன் மீது நடவடிக்கை கோரி காஞ்சிபுரம் எஸ்.பி.யிடம் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் மனு கொடுத்தனர்.
HIGHLIGHTS
SDPI Party- இந்து முன்னணி தலைவர் காடேஸ்வர சி. சுப்பிரமணியம் இந்து உரிமைகளின் மீட்பு பிரச்சார பயணத்தை கடந்த சில தினங்களுக்கு முன்பு காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேற்கொண்டார்.
அப்போது செய்தியாளர்கள் சந்திப்பில் , காஞ்சி இந்துக்கள் திருக்கோயில் அமைந்துள்ள பகுதிகளில் இறைச்சி கடைகள் செயல்படுவதாகும் இது பக்தர்களுக்கு தர்மசங்கடத்தை தருவதாகவும் , அதை அப்புறப்படுத்தாவிட்டால் பள்ளிவாசல் அமைந்துள்ள பகுதிகளில் பன்றி இறைச்சி கடை வைப்போம் என தெரிவித்தார்.
இது போன்ற பேச்சுக்கள் காஞ்சிபுரத்தில் உள்ள இந்து முஸ்லிம் நல்லுறவை பாதிக்கும் வகையிலும் , உண்மைக்கு புறம்பாக உள்ளதாகவும் அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்ட செயலாளர் ஜாபர் ஷெரீப் தலைமையில் அக்கட்சியினர் இன்று காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்.பி சு.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2