/* */

கொலை மிரட்டல் விடுத்த துணைத்தலைவர், வார்டு உறுப்பினர் மீது வழக்கு பதிவு

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சேத்துப்பட்டு கிராமத்தில் வாலிபருக்கு கொலை விடுத்த துணைத்தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

HIGHLIGHTS

கொலை மிரட்டல் விடுத்த துணைத்தலைவர், வார்டு உறுப்பினர் மீது வழக்கு பதிவு
X
வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த ஊராட்சி துணைத்தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டம் சேத்துப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவன் கேப்டன் பிரபாகரன். இவர் அதே பகுதியை சேர்ந்த சசிகலா என்ற பெண்ணை கலப்புத் திருமணம் செய்துகொண்டு விஷ்வா சுஜித் ஆகிய இரு குழந்தைகளுடன் அப்பகுதியில் வசித்து வருகின்றார்.

இந்நிலையில் கடந்த 2012ஆம் ஆண்டு இவரது மனைவியின் பூர்வீக சொத்தினை அதே பகுதியை சேர்ந்த பூபதி , வாசு மற்றும் மேல் மதுரமங்கலத்தினை சேர்ந்த படப்பை குணா ஆகிய மூவரும் ஏமாற்றிப் பெற்றுக் கொண்டதாகவும் கடனை திருப்பி செலுத்தி விட்டாலும் தொடர்ந்து அவர் மீது அவதூறாக பேசி கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 22 ஆம் தேதி மாலை 3 மணி அளவில் சேத்துப்பட்டு பாலம் அருகே வந்தபோது வழி மடக்கி இந்தப் புத்தாண்டு தினத்துக்குள் தீர்த்துக்கட்டி விடுவதாக மீண்டும் கொலை மிரட்டல் விடுத்ததால் சோமங்கலம் காவல் நிலையத்தில் கேப்டன் பிரபாகரன் புகார் மனு அளித்தார்.

அதனடிப்படையில் வழக்கு பதியப்பட்டு SC/ST சட்டப் பிரிவின் கீழ் மூன்று வழக்குகளும், IPC சட்டப் பிரிவின் கீழ் 4 வழக்குகளும் என ஏழு பிரிவுகளின் கீழ் தற்போது சேத்துப்பட்டு கிராம ஊராட்சி மன்றத்தின் துணைத் தலைவரான வாசு மற்றும் வார்டு உறுப்பினரான பூபதி மற்றும் மதுர மங்கலத்தை சேர்ந்த படப்பை குணா ஆகியோர் 3 பேர் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது.

Updated On: 26 Dec 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது