/* */

ஈரோடு மாவட்டத்தில் 2 டி.எஸ்.பி.க்கள் இடமாற்றம்

தமிழகத்தில் 76 போலீஸ் டி.எஸ்.பி.க்களை பணியிடம் மாற்றம் செய்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் 2 டி.எஸ்.பி.க்கள் இடமாற்றம்
X
தமிழகத்தில், 76 டி.எஸ்.பி கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பணிபுரியும் 76 போலீஸ் டி.எஸ்.பி.க்களை, பணியிட மாற்றம் செய்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இதில், சத்தியமங்கலம் டி.எஸ்.பி.யாக பணியாற்றிய ஜெயபாலன், புதிய பணியிடம் வழங்கப்படாமல் காத்திருப்பு பட்டியலில் உள்ளார். சத்தியமங்கலம் டி.எஸ். பி.யாக, காத்திருப்பு பட்டியலில் இருந்த சந்திரசேகரன் நியமிக்கப்பட்டார்.

ஈரோடு மாவட்ட சிறப்பு இலக்கு படை டி.எஸ்.பி.யாக பணியாற்றி வந்த ஜாகிர் உசேன், மதுரை சரகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அந்த பணியிடத்திற்கு நீலகிரி மாவட்ட குற்றப் பதிவேடுகள் பிரிவு டி.எஸ்.பி.யாக பணியாற்றிய சசிக்குமார் நியமிக்கப்பட்டார். அதேபோல், ஈரோடு மாவட்ட சிறப்பு இலக்கு படையில், ஏற்கனவே காலியாக இருந்த டி.எஸ்.பி. பணியிடத்தில் காத்திருப்பு பட்டியலில் இருந்த பாலசந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Updated On: 8 Aug 2022 11:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது