/* */

9 முதல் 12 ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இன்று திறப்பு

திண்டுக்கல்லில் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் என அனைவரும் முகக்கவசம் அணிந்திருந்தனர்.

HIGHLIGHTS

9 முதல் 12 ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இன்று திறப்பு
X

சமூக இடைவெளி மற்றும் முகக்கவசத்துடன் பள்ளி வகுப்பறையில் அமர்ந்துள்ள மாணவிகள்.

தமிழகம் முழுவதும் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் அனைத்து பள்ளிகளும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மூடப்பட்டது. கடந்த ஒன்றரை வருடங்களாக பள்ளிகள் மூடப்பட்டதால் மாணவர்கள் தற்போது ஆன்லைன் வகுப்புகள் மூலம் படித்து வந்தனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தற்போது குறைய தொடங்கியுள்ளது. இதனையடுத்து தமிழக அரசு அளித்துள்ள ஊரடங்கு தளர்வுகளில் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்காக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை திறக்க இன்று முதல் அனுமதி அளித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 180 அரசு பள்ளிகளும், 215 மெட்ரிக் மற்றும் தனியார பள்ளிகள் உள்ளன. 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாவட்டம் முழுவதும் ஒரு லட்சத்தி 5000 மாணவர்கள் பயின்று வருகின்றனர். வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் அலுவலக பணியாளர்கள் என இதுவரை 96% பேருக்கு கொரானா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

திண்டுக்கல் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் என அனைவரும் முகக்கவசம் அணிந்திருந்தனர். ஒவ்வொரு வகுப்பறையிலும் 20 மாணவர்கள் மட்டுமே அமர வைக்கப்பட்டனர். சுழற்சி முறையில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் வகுப்புகள் இன்று முதல் எடுக்கப்பட்டு வருகிறது.

பள்ளிவாயிலில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தம் செய்த பின்னரே பள்ளி வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். மதிய உணவு இடைவேளையின் போது மாணவர்கள் ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிட அனுமதிக்கப்படவில்லை. வகுப்பறைகளில் போதிய சமூக இடைவெளியுடன் மாணவர்களை அமர வைத்து ஆசிரியர்கள் பாடங்களை பயிற்றுவித்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் இந்த பணிகளை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் எட்டு குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் கல்லூரிகளிலும் அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைப்படி மாணவர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

Updated On: 1 Sep 2021 4:38 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  3. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  6. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  7. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  8. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி