Begin typing your search above and press return to search.
அரியலூர் அருகே லாரி மோதி காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு
அரியலூர் மாவட்டம் கீழப்பழூவூர் அருகே லாரி மோதிய விபத்தில் காவல் உதவி ஆய்வாளர் உயிரிழந்தார்.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன்(50). இவர், திருமானூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். நேற்று மாலை பணி முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் திருமானூரிலிருந்து கீழப்பழூவூர் நோக்கிச் சென்றார். சாத்தமங்கலம் அருகே சென்றபோது, பின்னால் வந்த லாரி மோதியதில், லாரியின் அடியில் சிக்கி உடல் நசுங்கி அந்த இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து கீழப்பழுவூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.