உறவினர் போல் நடித்து ஆசிரியர் வீட்டில் நகை திருடிய பெண்ணை தேடும் போலீஸார்
ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் உறவினர் போல நடித்து 22 பவுன் நகை திருடிய பெண்ணை போலீஸார் தேடி வருகின்றனர்
HIGHLIGHTS
திருவண்ணாமலை டவுன் ராஜராஜன் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (81), ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர் அவரது மனைவியுடன் வீட்டில் வசித்து வந்தார். பெண் ஒருவர் அவரது வீட்டிற்கு வந்து உள்ளார். அப்போது அவர் உறவினர் போல் பேசி அறிமுகம் செய்து கொண்டார்.
இதனை நம்பி சீனிவாசனும், அவரது மனைவியும் அந்த பெண்ணை வீட்டிற்குள் அமர வைத்து பேசியதாக கூறப்படுகிறது. உறவினர் பெண் தானே என்று நினைத்து கொண்டு சீனிவாசன் அவரை வீட்டில் இருக்க வைத்து விட்டு வெளியே சென்றுள்ளார். சீனிவாசன் மனைவியும் ஓய்வு எடுக்க சென்றதாக தெரிகிறது. அந்த சமயத்தில் வீட்டில் இருந்த அந்த பெண் பீரோவில் இருந்த 22 பவுன் நகையை திருடி கொண்டு தப்பியோடி விட்டார்.
பின்னர் வெளியே சென்ற சீனிவாசன வீடு திரும்பிய போது பீரோ திறக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து பீரோவை பார்த்த போது அதில் இருந்த நகை திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து தான் அவருக்கு வீட்டிற்கு வந்த பெண் உறவினர் இல்லை, திருட வந்தவர் என்று தெரியவந்தது.அதன் பின்னர் திருவண்ணாமலை டவுன் குற்றப்பிரிவு போலீசில் அவர் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.