தூய்மை அருணை அமைப்பினர் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
கோடை காலத்தை முன்னிட்டு திருவண்ணாமலை தூய்மை அருணை அமைப்பு சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.
HIGHLIGHTS
திருவண்ணாமலை காந்தி சிலை, திருவள்ளுவர் சிலை, பெரிய தெரு உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சிக்கு, தூய்மை அருணை அமைப்பின் மேற்பார்வையாளர் கார்த்திக் வேல்மாறன் தலைமை வகித்தார். அமைச்சர் எ வ.வேலு, சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தண்ணீர் பந்தல்களை திறந்து வைத்து பொதுமக்களுக்கு பழ ரசம், மோர், தர்பூசணி, குடிநீர் ஆகியவற்றை வழங்கினார்.
நிகழ்ச்சியில் சட்டப்பேரவை துணைத்தலைவர் பிச்சாண்டி , நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, மாநில தடகள சங்கத்தின் துணைத்தலைவர் எ வ.வே. கம்பன், மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், நகரமன்ற தலைவர் நிர்மலா, நகர மன்ற துணைத் தலைவர் ராஜாங்கம், நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் டி.வி.எம்.நேரு, தூய்மை அருணை ஒருங்கிணைப்பாளர் சங்கர வடிவேல், ஆ. ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் , பலர் கலந்து கொண்டனர்.