/* */

திருவண்ணாமலையில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
X

திருவண்ணாமலையில், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் கழகம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்,  ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்

திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முருகன், மாவட்ட பொருளாளர் சொக்கலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் ரகு கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி விளக்க உரையாற்றினார்.

இதில் ஆசிரியர்களுக்கு என்று தனியாக பாதுகாப்பு சட்டம் ஏற்படுத்த வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். கடந்த 2 ஆண்டுகளாக வழங்கப்படாத ஈட்டிய விடுப்பு ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட அமைப்பு செயலாளர் முருகவேல் நன்றி கூறினார்.

Updated On: 2 May 2022 6:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!