Begin typing your search above and press return to search.
சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது ஒளிரும் அதிசய நிகழ்வு
திருவண்ணாமலையில் சித்திரை முதல் நாள் மட்டும் சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி படும் அசிய நிகழ்வு நடைபெற்றது.
HIGHLIGHTS
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ளது திருநேர் அண்ணாமலை சிவன் கோவில் உள்ளது. மூலவரான சிவலிங்கத்தின் மீது வருடத்திற்கு ஒருநாள் மட்டுமே சூரியனின் ஒளி சில நிமிடங்கள் படும் விதமாக கோயில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று சித்திரை முதல் நாள் என்பதால் இன்று காலை அந்த சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளிபட்டது இந்த நிகழ்வு சூரிய பகவான் சிவபெருமானை வழிபடுவதாக ஐதீகம். இந்த நிகழ்வு வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் என்பதால் இன்று ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர். பக்தர்கள் அனைவரும் சாமி தரிசனம் செய்தனர்.
வருடத்திற்கு ஒருநாள் மட்டும் சரியாக கிழக்கு திசையில் சூரியன் உதிக்கும் என்பதை முன்னோர்கள் கணித்து அந்த ஒளி நேராக சிவன் மேல் படுமாறு கட்டமைத்துள்ளது. பக்தர்கள் பழங்கால கோயில் கட்டிடத்தினை பார்த்து ரசித்தனர்.