/* */

ஊரக வளர்ச்சி துறை வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்

திருவண்ணாமலையில் ஊரக வளர்ச்சி துறை மூலம் செயல்படுத்தப்படும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடந்தது.

HIGHLIGHTS

ஊரக வளர்ச்சி துறை வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்
X

 தீருவண்ணாமலை மாவட்ட வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் முருகேஷ் தலைமையில் நடைபெற்றது.

திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆட்சியர் முருகேஷ் தலைமை தாங்கினார். கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பிரதாப் முன்னிலை வகித்தார்.

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் பாஸ்கரன் வரவேற்றார். கூட்டத்தில் மத்திய அரசு, மாநில அரசின் நிதி ஒதுக்கிட்டின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் அனைத்து வளர்ச்சி திட்டப்பணிகள் மீதான விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, பணிகளை விரைந்து முடிக்க அறிவுரை வழங்கப்பட்டது.

தொடர்ந்து மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதியளிப்புத் திட்டம், ஜல்ஜீவன் மிஷன் திட்டம், பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) ஆகிய மத்திய, மாநில அரசு வளர்ச்சி திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியமைக்காகவும், சிறந்த முறையில் செயலாக்கம் செய்த ஒன்றியங்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையை சேர்ந்த பணிமேற்பார்வையாளர்கள், சாலை ஆய்வாளர்கள், ஊராட்சி செயலர்கள் ஆகியோரை பாராட்டி பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியர் வழங்கினார்.

கூட்டத்தில் உதவி திட்ட அலுவலர்கள் அருண், உமாலட்சுமி, நாகேஷ்குமார், உதவி இயக்குனர் (ஊராட்சி) சுரேஷ்குமார் உதவி இயக்குனர்கள் (தணிக்கை) கருணாநிதி, யுவராஜ், ஆட்சியர்ரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) திருமால் உள்பட அனைத்து பிரிவு அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

Updated On: 27 May 2022 1:36 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  2. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  3. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  4. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  5. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  6. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  7. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!
  8. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!
  9. இந்தியா
    பெரியவர்களுக்கான சிறைகளில் குழந்தைகள்..! அதிர்ச்சி அறிக்கை..!
  10. இந்தியா
    மோக வலையில் ஏவுகணை ரகசியம்: பாகிஸ்தான் சூழ்ச்சி தோல்வி