/* */

போளூரில் ஏரி கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றிய வருவாய்த்துறை அதிகாரிகள்

போளூர் அருகே பொதுமக்களுக்கு இடையூறாக போடப்பட்ட இரும்பு கேட்டை வருவாய்த்துறை அதிகாரிகள் அகற்றினார்கள்.

HIGHLIGHTS

போளூரில் ஏரி கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றிய வருவாய்த்துறை அதிகாரிகள்
X

போளூரில் வட்டாட்சியர் சண்முகம் தலைமையில் பொக்லைன் இயந்திரம் மூலம் இரும்பு கேட்டை அகற்றப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே கோரால்பாக்கம் கிராமத்தை சார்ந்த பழனி என்பவர் கரைப்பூண்டி கிராமத்தில் ஏரி கால்வாய் புறம்போக்கில் பொதுமக்களுக்கு இடையூறாக இரும்பு கேட் அமைத்திருந்தார்.

இதனால் பொதுமக்கள் ஏரிக்கால்வாயை கடந்து தங்களது நிலம் மற்றும் ஆடு மாடுகளை ஓட்டி செல்ல முடியாமல் இருந்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஆரணி வருவாய் கோட்டாட்சியர் தனலட்சுமியிடம் புகார் மனு அளித்தனர். இந்த மனுவின் மீது நடவடிக்கை எடுக்க போளூர் வட்டாட்சியர் சண்முகத்துக்கு கோட்டாட்சியர் உத்தரவிட்டார். இந்த உத்தரவின் பேரில் வட்டாட்சியர் சண்முகம் தலைமையில் பொக்லைன் இயந்திரம் மூலம் இரும்பு கேட்டை அகற்றினர்.

அப்போது மண்டல துணை தாசில்தார்கள், தட்சிணாமூர்த்தி, வட்ட துணை ஆய்வாளர் சரவணன், வருவாய் ஆய்வாளர் பாரதி, கிராம நிர்வாக அலுவலர் அபிமன்னன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் உடனிருந்தனர்.

Updated On: 26 Aug 2022 10:54 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  3. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  4. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  6. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க
  7. கோவை மாநகர்
    கோவை மாநகரில் ஒரு மணி நேரம் கனமழை ; மக்கள் மகிழ்ச்சி
  8. நாமக்கல்
    வெண்ணந்தூரில் தனி செயலாளரின் தந்தையின் படத்திற்கு முதல்வர் மாலை...
  9. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?
  10. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!