Begin typing your search above and press return to search.
கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஊராட்சி செயலாளர்கள் மனு
தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு சட்டப் பேரவைத் துணைத் தலைவரிடம் கிராம ஊராட்சி மன்ற செயலாளர்கள் கோரிக்கை மனு அளித்தனர்
HIGHLIGHTS
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருவண்ணாமலையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில தலைவர் ஜான் பிரகாஷ் உரையாற்றினார். இதையடுத்து அவரது தலைமையில் தலைமை நிலைய செயலாளர் சுரேஷ், மாவட்ட தலைவர் சுகுமார், மாவட்ட செயலாளர் சீதாராமன், உள்ளிட்டோர் சட்டப்பேரவை துணைத்தலைவர் பிச்சாண்டியை நேரில் சந்தித்து தங்களது கோரிக்கை மனுவை அளித்தனர்.
இந்த மனுவை பெற்றுக்கொண்ட சட்டப்பேரவை துணைத்தலைவர் பிச்சாண்டி, கோரிக்கைகள் குறித்து முதல்வர், துறை அமைச்சரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார் . அதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் ஆட்சியர் பிரதாப்பிடமும் கோரிக்கை மனுக்களை அளித்தனர்